General04 August 2026

கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்றிரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று (04) இரவு 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மறு அறிவித்தல் வரை கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் குறிப்பிடப்பட்ட கடற்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, கடற்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கூர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes