தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது, தமிழக சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதால் விசாரணையை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு விஜய் தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, சங்கீதா காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சங்கீதாவிடம் சுமார் 15 நிமிடங்கள் நீதிமன்றம் கேள்விகள் எழுப்பி விளக்கம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, தாக்கல் செய்யப்பட்டிருந்த விவாகரத்து மனுவை மீளப் பெற விரும்புவதாகவும், தனது கணவர் விஜய்யுடன் இணைந்து வாழ விருப்பம் உள்ளதாகவும் சங்கீதா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சங்கீதாவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், விவாகரத்து மனுவை மீளப் பெற அனுமதித்து வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.
Latest News
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
Local
09 August 2026
சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
Local
09 August 2026
மூலிகை மருத்துவத்தை நாடி ஆபத்தில் சிக்கித் தவிக்கும் யேமன் மக்கள்!
Local
09 August 2026
35 கிலோ சைக்கிளை (ஈருருளியை) பற்களால் கவ்வி நடந்து சாதனை
Local
09 August 2026
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகள் - போதைப்பொருட்களுடன் இருவர் கைது
Local
09 August 2026
நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!
Local
09 August 2026
திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவு: ரசிகர்களுக்கு நன்றி கூறிய வெங்கட் பிரபு!
Local
09 August 2026
அஸ்வெசும நிதியில் மாபெரும் மோசடி: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!
Local
09 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டணமா? அமெரிக்கா வெளியிட்ட முக்கிய செய்தி!
Local
09 August 2026
இஸ்ரேலின் பிடியில் உள்ள மருத்துவரின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை
Local
09 August 2026