நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கடந்த 7 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இதனிடையே, நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, தானும் நீதியமைச்சரும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து இது தொடர்பான விடயங்களை விளக்கியதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Latest News
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
அமெரிக்காவின் சந்திர தள திட்டத்தில் இணைய இந்தியாவிற்கு அழைப்பு!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026
இலங்கை - இந்திய டெஸ்ட் தொடருக்கான செம்பியன் கிண்ணம் அறிமுகம்!
Local
14 August 2026
சுற்றுலா வருவாய் சரிவு: ஆறுதலளிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்!
Local
14 August 2026