தற்போதைய தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்த விவகாரம் அரசியல் தரப்பில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
வழக்கமாக தலைவர்கள் அவைக்குள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது சட்டமன்ற மரபாக இருந்துவரும் நிலையில், உதயநிதியின் செயற்பாடு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிகழ்வு திராவிட முன்னேற்றக்கழகத் தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதன் நேரடித் தாக்கம் சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
முதலமைச்சர் விஜய் அவைக்குள் வந்தபோது, கே.என்.நேருவைத் தவிர வேறு எந்த திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லை.
புன்முறுவலுடன் அவையின் மையப்பகுதி வரை வந்து முதலமைச்சர் வணங்கியபோதும், உதயநிதி ஸ்டாலின் தனது பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
சட்டமன்ற விவாதங்களின் போது முதலமைச்சர் விஜய் "அப்பாவைக் காணோம்" என்று குறிப்பிட்டதும், விவசாய பாதீட்டு விவாதத்தின்போது உதயநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் "ஆவணங்களையும் செய்தித்தாள்களையும் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்ததும் இரு தரப்புக்கும் இடையேயான பனிப்போரை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கடுமையான விமர்சனங்களும் இயல்பானவை என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குள் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டுவது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் கருத்துகள் நிலவுகின்றன.
முதலமைச்சர் பதவி என்பது ஒரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானதல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயக தீர்ப்பால் உருவான அரசியலமைப்பு பொறுப்பாகும்.
எனவே அந்தப் பதவிக்குத் தர வேண்டிய அடிப்படை மரியாதையைத் தவிர்ப்பது சட்டமன்ற மரபுகளைப் பலவீனப்படுத்தும் என்றும் மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிப்பதாக தமிழக ஊடகங்கள் கூறியுள்ளன.
வழக்கமாக தலைவர்கள் அவைக்குள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது சட்டமன்ற மரபாக இருந்துவரும் நிலையில், உதயநிதியின் செயற்பாடு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிகழ்வு திராவிட முன்னேற்றக்கழகத் தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதன் நேரடித் தாக்கம் சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
முதலமைச்சர் விஜய் அவைக்குள் வந்தபோது, கே.என்.நேருவைத் தவிர வேறு எந்த திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லை.
புன்முறுவலுடன் அவையின் மையப்பகுதி வரை வந்து முதலமைச்சர் வணங்கியபோதும், உதயநிதி ஸ்டாலின் தனது பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
சட்டமன்ற விவாதங்களின் போது முதலமைச்சர் விஜய் "அப்பாவைக் காணோம்" என்று குறிப்பிட்டதும், விவசாய பாதீட்டு விவாதத்தின்போது உதயநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் "ஆவணங்களையும் செய்தித்தாள்களையும் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்ததும் இரு தரப்புக்கும் இடையேயான பனிப்போரை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கடுமையான விமர்சனங்களும் இயல்பானவை என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குள் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டுவது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் கருத்துகள் நிலவுகின்றன.
முதலமைச்சர் பதவி என்பது ஒரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானதல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயக தீர்ப்பால் உருவான அரசியலமைப்பு பொறுப்பாகும்.
எனவே அந்தப் பதவிக்குத் தர வேண்டிய அடிப்படை மரியாதையைத் தவிர்ப்பது சட்டமன்ற மரபுகளைப் பலவீனப்படுத்தும் என்றும் மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிப்பதாக தமிழக ஊடகங்கள் கூறியுள்ளன.
Latest News
இந்தியாவில் UPI (Unified Payments Interface) பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!
Local
18 August 2026
ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!
Local
18 August 2026
பெண் ஒருவருக்கு எதிரான வழக்கில் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!
Local
18 August 2026
அமெரிக்காவின் பிரபல நடிகை 36 வயதில் உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது!
Local
18 August 2026
ஸிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு விபத்து: இதுவரையில் 92 பேர் பலி!
Local
18 August 2026
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதாக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது
Local
18 August 2026
60 நாட்கள் ஒப்பந்தம் நிறைவு: ஈரான்- அமெரிக்காவுக்கு இடையில் தீவிர பதற்றம்!
Local
18 August 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச்சூடு: உணவக உரிமையாளர் படுகாயம்!
Local
17 August 2026
பல்லேகலை சிறைச்சாலையில் பரபரப்பு: ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி சிக்கினார்!
Local
17 August 2026
கின்னஸ் சான்றளித்த உலகின் மிக உயரமான 10 பெண்களின் பட்டியல் வெளியீடு!
Local
17 August 2026