International16 August 2026

சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய நிலையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகளைத் தாண்டி, நடிகை த்ரிஷாவின் பங்கேற்பே தமிழக ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் பங்கேற்றிருந்தமை தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கவனம் பெற்றுள்ளன.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு அருகில் நடிகை த்ரிஷாவும் அவரது தாயாரும் அமர்ந்திருந்த காணொளிகள் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த விஜய், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகி, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில், அதுவும் முதல் தேர்தலிலேயே 1.72 கோடி மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற வலுவான அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கை மையமாகக் கொண்டு கிடைத்த இந்த வெற்றியும் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

வேட்பாளர்களை விட விஜய் என்ற தனிநபரை நம்பி மக்கள் வாக்களித்ததாகக் கூறப்படும் இந்த அரசியல் மாற்றமும் தமிழக அரசியல் வரலாற்றில் கவனம் பெற்றுள்ளது.

இவ்வாறான பல்வேறு அரசியல் முக்கியத்துவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய சுதந்திர தின விழாவில், நடிகை த்ரிஷாவின் பங்கேற்பே தமிழக ஊடகங்களில் கூடுதல் கவனம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes