General24 August 2026

பதுளை போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் உடலமாக மீட்பு

காணாமல் போனதாகக் கூறப்பட்ட, பதுளை போதனா மருத்துவமனையைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை காவல்துறை தெரிவித்துள்ளது.

மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட உந்துருளி தொடர்பில் காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த உந்துருளி நேற்று (23) இரவு முதல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அது காணாமல் போனதாகக் கூறப்பட்ட மருத்துவருக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து மருத்துவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உடலத்திற்கு அருகில் சில மருந்து மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனைக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes