அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகளை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டின் தேசிய சந்தை ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட Model 3, Model Y, Model X மற்றும் Model S வகைகளைச் சேர்ந்த சுமார் 2.98 மில்லியன் டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் இந்த மீளப் பெறும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
விபத்துகள் போன்ற தீவிரமான அவசரச் சூழ்நிலைகளில் வாகனத்தின் குறைந்த மின் அழுத்த அமைப்பு செயலிழந்தால், உட்புறக் கதவு கைப்பிடிகள் இருக்கையின் நிறத்துடனேயே ஒத்துப் போவதால் அவற்றைக் கண்டறிந்து இயக்கச் சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதோ அல்லது வெளியில் உள்ளவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோ தடைபடலாம் என்று அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
டெஸ்லாவைத் தவிர, சியோமி, எக்ஸ்பெங், ஜியோகி, செரி, லீப்கோட்டார் மற்றும் BAIC உள்ளிட்ட மேலும் எட்டு முன்னணிச் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தங்கள் சிற்றூந்துகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், கைப்பிடிகள் அருகே எச்சரிக்கை ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டுவதுடன், விபத்துக்குப் பிறகு சாளரங்களை தானாக இறக்கும் வசதிக்காக மென்பொருள் மேம்படுத்தல்களையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
சமீபகாலமாக நவீன சிற்றூந்துகளின் வடிவமைப்பு முறைகளால் விபத்து நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துச் சீனாவில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட Model 3, Model Y, Model X மற்றும் Model S வகைகளைச் சேர்ந்த சுமார் 2.98 மில்லியன் டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் இந்த மீளப் பெறும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
விபத்துகள் போன்ற தீவிரமான அவசரச் சூழ்நிலைகளில் வாகனத்தின் குறைந்த மின் அழுத்த அமைப்பு செயலிழந்தால், உட்புறக் கதவு கைப்பிடிகள் இருக்கையின் நிறத்துடனேயே ஒத்துப் போவதால் அவற்றைக் கண்டறிந்து இயக்கச் சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதோ அல்லது வெளியில் உள்ளவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோ தடைபடலாம் என்று அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
டெஸ்லாவைத் தவிர, சியோமி, எக்ஸ்பெங், ஜியோகி, செரி, லீப்கோட்டார் மற்றும் BAIC உள்ளிட்ட மேலும் எட்டு முன்னணிச் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தங்கள் சிற்றூந்துகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளன.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், கைப்பிடிகள் அருகே எச்சரிக்கை ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டுவதுடன், விபத்துக்குப் பிறகு சாளரங்களை தானாக இறக்கும் வசதிக்காக மென்பொருள் மேம்படுத்தல்களையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
சமீபகாலமாக நவீன சிற்றூந்துகளின் வடிவமைப்பு முறைகளால் விபத்து நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துச் சீனாவில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Latest News
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026
வாட்ஸ்அப் குழுவின் ஊடாக உலகளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கோடிக்கணக்கான யுரோ பரிமாற்றம்: வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெல்ஜியம்
Local
31 August 2026
நேபாளத்தில் தொடரும் பேரவலம்: நீர்மின்சார நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!
Local
31 August 2026
இசையுலகின் 'டெமி கோட்ஸ்' இவர்கள்தான்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Local
31 August 2026
இங்கிலாந்து அணியிடம் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான் அணி
Local
31 August 2026
தொழில் வாழ்க்கையில் புதிய மைல்கல்: வரலாறு படைத்த லியோனல் மெஸ்ஸி!
Local
31 August 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப்போவதில்லை: வாக்கெடுப்பில் தீர்ப்பை வழங்கிய ஐஸ்லாந்து மக்கள்
Local
31 August 2026
செல்சியா அணியில் இணைந்தார் எமிலியானோ மார்டினேஸ்: 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து!
Local
31 August 2026
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
Local
31 August 2026
பணவீக்கம் 89 சதவீதமாக உயர்வு: அமெரிக்க - இஸ்ரேல் போரால் அவதியுறும் ஈரானிய மக்கள்!
Local
31 August 2026