இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் 'பாலஸ்தீன நடவடிக்கை' (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”பாலஸ்தீன நடவடிக்கை குழு”, 2020 ஜூலை முதல் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை ஆதரித்துள்ளதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசால் கடந்த 2025ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு, தற்போது அமெரிக்காவும் தடை விதித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவுக்குள் உள்ள அந்த அமைப்பின் சொத்துகளையும் முடக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதிலளித்துள்ள அந்த அமைப்பின் இணை நிறுவனர் ஹுடா அமோரி (Huda Ammori), தாங்கள் செய்த செயல்கள் எப்போதும் உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டவையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அமெரிக்காவின் இந்த செயல் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent), தீவிரவாதக் குழுக்களின் நிதியாதாரங்கள் முழுமையாகத் துண்டிக்கப்படும் வரை தங்களது பொருளாதார நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலுடன் தொடர்புடைய ஆயுத ஆலைகளுக்கு எதிராக நேரடிப் போராட்டங்களை முன்னெடுத்து வந்த இந்த அமைப்பு, இங்கிலாந்தில் ஏற்கனவே சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தத் தடைக்கு எதிராகப் போராடிய 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதும், இதன் சில உறுப்பினர்கள் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Latest News
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!
வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமில்லை: பிசிசிஐயின் விதிமுறையால் இந்திய இளையோர் அணியில் அதிரடி மாற்றம்!
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!