தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) வேட்பாளர் வி.எஸ்.பாபு பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (03) காலை 10:30 க்கு வழங்கவுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டாமிடத்தைப் பெற்ற மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, குறித்த தொகுதியிலுள்ள 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (விவிபேட்) இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன.
இதன்போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டி, மு.க.ஸ்டாலின் தரப்பினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவில், வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையின் போது சில இயந்திரங்கள் திடீரெனக் கோளாறடைந்து செயலிழந்ததாகவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்த போது பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை மீண்டும் முழுமையாகச் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றும், த.வெ.க உறுப்பினரான வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லுபடியற்றதாக அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரரான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வாரம் இடம்பெற்ற விசாரணைகளின் போது மனுதாரர் மு.க.ஸ்டாலின் தரப்பு, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தரப்பு நியாயாதிக்கங்கள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை காலை 10:30 க்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!
Local
07 September 2026
பனிப்பாறை சரிவால் கோரத் தாண்டவம்: 13-வது நாளாகத் தீவிரமடையும் தேடுதல் வேட்டை!
Local
07 September 2026
மகளிர் ஆசியக் கிண்ணம் 2026: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!
Local
07 September 2026
கற்பிட்டியில் 200 புறாக்களுடன் நால்வர் கைது: 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பந்தயப் புறாக்கள் மீட்பு!
Local
07 September 2026
அம்பாறை, மட்டக்களப்பில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கடும் வீழ்ச்சி: சீயம்பலாண்டுவையில் குழாய் கிணறுகள் திருத்தம்
Local
07 September 2026
குடும்ப மருத்துவர் முறைமை மற்றும் 'ஆரோக்கிய' மையங்கள் மூலம் சுகாதாரத் துறையில் புதிய சீர்திருத்தம்: ஜனாதிபதி
Local
07 September 2026
புடாபெஸ்டில் வரலாற்றுச் சமர்: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை வீரன்!
Local
07 September 2026
டெங்கு எச்சரிக்கை: உயிரிழப்புகள் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
Local
07 September 2026
தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
07 September 2026
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: ஸ்ரீலங்கன் வானூர்திகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன!
Local
06 September 2026