General07 September 2026

தொடர் பயணங்களால் ஆபத்து: வாசனா யானை தொடர்பில் கதிர்காம தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புடைய கதிர்காம தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ‘வாசனா’ யானையை இனிமேல் நாட்டின் பிரதான ஊர்வலங்களில் (பெரஹெரா) மட்டுமே பங்கேற்கச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யானையின் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கதிர்காம தேவஸ்தானத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கதிர்காம தேவஸ்தானத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறிய ஊர்வலங்களிலும் வாசனா யானை பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளது.

அதன் காரணமாக தற்போதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து ஊர்வலங்களுக்காக வாசனா யானையை வழங்குமாறு கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

இருப்பினும், யானையைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதும் ஊர்வலங்களில் பயன்படுத்துவதும் அதன் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என கதிர்காம தேவஸ்தானத்தின் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes