Sports12 August 2026

14 ஆவது ஆசிய வலைப்பந்து தொடர்: இந்தியாவை 100-34 என வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்குத் தகுதி

ஹொங்கொங்கில் நேற்று நடைபெற்ற 14 ஆவது ஆசிய நெட்போல் செம்பியன்ஷிப் தொடரின் குழுநிலைப் போட்டி ஒன்றில், இந்திய அணியை 100-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இலங்கை வலைப்பந்து அணி, வெற்றி பெற்றுள்ளது.

திஷாலா அல்கம தலைமையிலான இலங்கை அணி, போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆதிக்கத்தைச் செலுத்தி நான்கு சுற்றுகளையும் எளிதாகக் கைப்பற்றியதுடன், 66 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம், மாலைதீவு அணிக்கு எதிரான கடைசி குழுப்போட்டி மீதமுள்ள நிலையிலும், இலங்கை அணி அரைஇறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்தநிலையில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, நொக்-அவுட் சுற்றிலிருந்து வெளியேறியுள்ளது.

இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் மாலைதீவு அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனிடையே நேற்று நடைபெற்ற மற்றொரு குழுநிலைப் போட்டியில் நடப்பு செம்பியனான சிங்கப்பூரை 56-42 என்ற புள்ளிக் கணக்கில் மலேசிய அணி வீழ்த்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes