Sports25 August 2026

தேவ்தத் படிக்கலின் தொடர் சதங்கள்: கம்பீரின் முடிவுகளுக்கு ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தேவ்தத் படிக்கல் சதம் அடித்துள்ளார்.

இந்த நிலையில், சாய் சுதர்சனை நீண்ட காலத்திற்கு மூன்றாவது இடத்தில் களமிறக்க விரும்பும் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் திட்டத்திற்கு முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 167 ஓட்டங்களைப் பெற்ற தேவ்தத் படிக்கல், தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 117 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

சாய் சுதர்சன் காயமடைந்ததால் மட்டுமே படிக்கலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும், இலங்கைக்கு எதிரான போட்டிகளில் சுதர்சனை மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறக்கவே கம்பீர் திட்டமிட்டிருந்ததாக ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

படிக்கலின் இந்தத் தொடர் சதங்கள் அணி நிர்வாகத்தின் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஸ்ரீகாந்த், “படிக்கலை அணியில் இருந்து எவ்வாறு நீக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டு கம்பீர் துள்ளிக் குதிப்பார் என்று குறிப்பிட்டுள்ள அவர், கம்பீர் சிறந்த வீரராக இருந்தாலும், தனது முடிவுகள் தொடர்பாக வீரர்களிடம் கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes