General20 September 2025

UPDATE: தீயணைப்பு பணிகளுக்கு விமானப்படை வானூர்தி

UPDATE: 6.08 PM                   2025.09.20

புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள 5 மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் விமானப்படையும் இணைந்துள்ளது.

அதற்கமைய, இலங்கை விமானப்படையின் வானூர்தியொன்றும் தீயணைப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்தநிலையில், கள நிலைமைகளை கருத்திற்கொண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேலதிகமாக பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றையும் ஈடுபடுத்துவதற்கு விமானப் படை முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
--------------------------------------------------------------------------------------
 
 கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
 
இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Related Recomands
Hiru TV News | Programmes