General20 September 2025

செயலிழந்த கட்டுநாயக்க விமான நிலைய கணினி அமைப்பு வழமைக்கு திரும்பியது

செயலிழந்திருந்த கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலைய கணினி அமைப்பு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்டுள்ள "எல்லைக் கட்டுப்பாட்டு கணினி அமைப்பு" இன்று (20) பிற்பகல் 1.45 அளவில் செயலிழந்தது.

சுமார் இரண்டரை மணிநேரத்தின் பின்னர் இந்த அமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளது.

இதனிடையே, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களங்களின் கணினி அமைப்புகளில் "இணையவழி தாக்குதல்" நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இலங்கையில் உள்ள இந்த கணினி கட்டமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக தனியார் நிறுவனமொன்றினால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு ஒவ்வொரு மாதமும் பல முறை இதுபோன்று செயலிழந்ததாகவும், பிற்பகலில் பல நாட்களில், இந்த அமைப்பு மெதுவாகச் செயல்படுவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் நேரத்தில், இதுபோன்ற பலவீனமான கணினி அமைப்புக்கு பதிலாக அரசாங்கத்தால் கணினி கட்டமைப்பினை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை அந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Related Recomands
Hiru TV News | Programmes