General25 October 2025

எதிர்வரும் நாட்களில் மழை தொடரும்

நாட்டில் எதிர்வரும் நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
நாட்டில் சில பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes