General02 December 2025

தொடருந்து சேவைக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக தொடருந்து சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தொடருந்து திணைக்களம் புதிய திருத்தப்பட்ட நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிரதான மார்க்க தொடருந்து சேவை மண்சரிவால் ஏற்பட்ட சேதத்தினால் தற்போது அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், புத்தளம் மார்க்க தொடருந்து சேவை கொச்சிக்கடை வரை மட்டுமே இயங்குகிறது.

இருப்பினும், கொழும்பு–பெலியத்த (கரையோர மார்க்கம்) மற்றும் களனிவெளி மார்க்கங்கள் வழமைபோல் இயங்குகின்றன.

அனர்த்தத்தால் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால், மலையக மார்க்கம், வடக்கு, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மற்றும் மாத்தளை மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், சேவைகள் விரைவில் வழமைக்குத் திரும்பும் என்றும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ள தொடருந்து திணைக்களம், மறு அறிவித்தல் வரை இந்த அட்டவணையின் பிரகாரம் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

No description available.
No description available.No description available.
Related recommendation
Hiru TV News | Programmes