General13 December 2025

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருணாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கண்டி மாவட்டத்துக்கும், குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டிருந்த மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு அபாய அறிவிப்பும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த அபாய எச்சரிக்கையானது, நாளை மாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes