General16 December 2025

தொடரும் மழையுடனான வானிலை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று(16) மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சுமார் 50 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
இதேவேளை, 06 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 04 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. 
 
அதன்படி நுவரெலியா, மாத்தளை, குருநாகல், கேகாலை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes