General16 December 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு வேண்டுகோள்

டிட்வா சூறாவளியால் அழிக்கப்பட்ட தென்னை மரங்கள் குறித்த தகவல்களை டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வழங்குமாறு பொதுமக்களுக்கு தென்னை பயிர்செய்கைச் சபை அழைப்பு விடுத்துள்ளது. 
 
தென்னை பயிர்செய்கைச் சபையின் தலைவர் கலாநிதி. சுனிமல் ஜயகொடி தெரிவிக்கையில், உள்ளூர் கிராம அலுவலர்கள் மூலம் இந்தத் தகவலுக்கான பல கோரிக்கைகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 
 
பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையைத் தீர்மானிக்க இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படும். 
 
அழிக்கப்பட்ட ஒரு தென்னை மரத்திற்கு ரூ. 10,000 என்ற முன்மொழியப்பட்ட மானியம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்று தெளிவுபடுத்தினார். 
 
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் பரிசீலித்த பின்னரே நஷ்ட ஈடு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes