General06 May 2026

மலையக மக்களின் காணி உரிமையை தாரைவார்த்தால் போராட்டம் வெடிக்கும்!" - நாடாளுமன்றில் மனோ கணேசன் எச்சரிக்கை

"மலையக மக்களுக்கு வழங்க வேண்டிய காணி உரிமையை அவர்களுக்கு வழங்காமல் வேறு தரப்பினருக்கு வழங்கினால், தமிழ் முற்போக்கு கூட்டணி மக்களைத் திரட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபடும்" என அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று சபையில் எச்சரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா (சட்டமன்றத் தேர்தல்) நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் யோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பாரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்திய வம்சாவளி மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கூட்டணி என்ற ரீதியில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை எமது மக்களின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரச்சினை என்பது காணி உரிமை மட்டுமே.மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளை அவர்களுக்கு வழங்காமல், வெளித்தரப்பினருக்கு வழங்க அரசு முற்பட்டால் அதனை வேடிக்கை பார்க்க மாட்டோம்.

அனைத்து மலையக மக்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும்.
"மலையக மக்களை இந்த நாட்டின் கௌரவமான குடிமக்களாகக் கருத வேண்டும். தேர்தல்களின் போது வழங்கப்படும்.

வாக்குறுதிகள் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்" என மனோ கணேசன் தனது உரையில் வலியுறுத்தினார்.அரசாங்கம் மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறினால், அடுத்தகட்டமாகப் போராட்டக் களமே தீர்மானிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes