General07 May 2026

சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 256 என்புக்கூட்டுத் தொகுதிகள்!

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் 9ஆம் நாள் பணிகள் நேற்று இடம்பெற்ற வேளையில், மண்ணிற்குள் மறைக்கப்பட்டிருந்த மர்மங்களின் சாட்சியங்கள் மேலும் வெளிவந்துள்ளன.

நேற்றைய தின அகழ்வுப் பணிகளின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து 3 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதேவேளை, மற்றுமொரு என்புக்கூடும் நேற்று வெளிப்பட்டிருந்தது. எனினும், அந்த எலும்புக்கூட்டின் பெரும்பகுதிகள் அங்கிருக்கும் மயானத்தின் எரிமேடை கட்டுமானத்திற்கு கீழ் சிக்கியுள்ளதால், அதனைச் சேதமின்றி அகழ்ந்தெடுக்கும் பணிகளை வரும் நாட்களில் முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

செம்மணி புதைகுழி விவகாரத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 256 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டிருந்தன.

அவற்றில் 252 எலும்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes