International12 May 2026

விஜய்யின் வெற்றியால், உடைந்துப்போகும் எம்ஜிஆர் கட்சி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பிளவு குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, இந்த முறை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் தோல்வி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின் போது அதிமுகவில் நிலவும் விரிசல் வெளிப்படையாகத் தெரிந்தது.

இந்தநிகழ்வின்போது எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் ஐந்து பேர்; மட்டுமே வந்து பதவியேற்றனர்.

எஸ்.பி. வேலுமணி அணியின் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்; தனியாக வந்தனர்.

சி.வி. சண்முகம் முதலில் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்காமல் பாதியிலேயே வெளியேறினார். பின்னர் சபாநாயகர் அறையில் தனியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ஓ.எஸ். மணியன் தலைமையிலான ஒரு குழுவினர், எடப்பாடி பழனிசாமியைத் தலைவராக அங்கீகரிக்கக் கோரி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

அதேநேரம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான ஒரு குழுவினர் தனியாகக் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.

சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு ஆதரவாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி குழுவினர் தனி அணியாகச் செயல்படப் போகிறார்களா அல்லது விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கப் போகிறார்களா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

தலைமை மாற்றம் கோரும் குரல்கள் வலுத்து வருவதால், எடப்பாடி பழனிசாமி இந்த எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்துவாரா அல்லது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில்; மீண்டும் ஒரு பிளவு ஏற்படுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும், கொங்கு மண்டலத்தின் முக்கியத் தலைவரான எஸ்.பி. வேலுமணிக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதே இந்த அரசியல் குழப்பத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes