General05 June 2026

அரசின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆக உயர்த்த யோசனை கோரல்!

அரசின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% ஆக உயர்த்துவதற்கான நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்கை எட்டும் நோக்கில் பொருத்தமான யோசனைகள், கொள்கை பரிந்துரைகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வருமான முகாமைத்துவ குழுவினால் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த குழுவுக்கு, நாட்டின் அறிஞர்கள், தொழில்முறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் இலங்கைப் பிரஜைகள் எவரும் தங்களது பங்களிப்புகளை வழங்க முடியும்.

குறிப்பாக, முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வரி அடிப்படையை விரிவுபடுத்துதல், வருவாய் ஈட்டும் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கல், தானாக முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு அடிப்படையிலான வருவாய் அமைப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளின் கீழ் இந்த யோசனைகள் முன்வைக்கப்படலாம்.

இலங்கையின் பொது நிதிக் கொள்கைகள் குறித்து விசேட நிபுணத்துவம் பெற்ற எவராலும் சமர்ப்பிக்கப்படக்கூடிய இந்த யோசனைகள், அதன் சுருக்கம், செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக PDF வடிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக 2026 ஜூன் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வருமான முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes