General13 June 2026

இந்திய வானூர்தி விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு

இந்திய வான்படைக்கு சொந்தமான AN-32 ரக வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் (Jorhat) வானூர்தி நிலையத்தில் குறித்த வானூர்தியை தரையிறக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓடுதளத்தில் தரை இறங்கிய சில வினாடிகளில் வானூர்தி தீப்பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது.

வானூர்தி விபத்துக்குள்ளானதில் 2 உயர் அதிகாரிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு அதிகாரி காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
Related recommendation
Hiru TV News | Programmes