International15 June 2026

வெறும் ரூ.50,000-க்கு குழந்தையை விற்ற தாய் கைது : 6 பேருக்கு எதிராக நடவடிக்கை!

ஆம்பூரில் (இந்திய மதிப்பில்) ரூ.50,000-க்கு இரண்டு மாத பெண் குழந்தையை விற்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தையை விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குழந்தையை வாங்கிய நபர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் மொத்தம் 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அந்த பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை தொடர்பான விழிப்புணர்வு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes