General16 June 2026

காலி முதல் பொத்துவில் வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கும்: கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் இது குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பில் வெளியிடப்படும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
Related recommendation
Hiru TV News | Programmes