General17 June 2026

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் கண்ணீர் சிந்தியதற்கான காரணத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி

கால்பந்து தொடரின் குழு 'ஜே' தொடக்க ஆட்டத்தில் அல்ஜீரியாவுக்கு எதிராக தனது முதல் கோலை அடித்த பின்னர், ஆர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் கண்ணீர் சிந்திய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் தனது முதலாவது கால்பந்து தொடருக்கான ஹெட்ரிக்கை பதிவு செய்து, மிரோஸ்லாவ் குளோசேயின் கால்பந்து தொடர் அதிக கோல் சாதனையை சமன் செய்த போதிலும், அவரது இந்த அழுகை ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து போட்டிக்குப் பின்னர் பேசிய மெஸ்ஸி, தனது கண்ணீருக்கும் கால்பந்தாட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

"அது கால்பந்து சார்ந்த விடயம் அல்ல, கடந்த சில நாட்களாக நான் மிகவும் கடினமான மற்றும் சிக்கலான காலகட்டத்தைக் கடந்து வந்தேன். அது முற்றிலும் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பட்ட விடயம்," என்று மெஸ்ஸி கூறினார்.

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உறுதுணையாக இருந்த சக வீரர்கள் மற்றும் ஆர்ஜென்டினா கால்பந்து குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தனது தற்போதைய கால்பந்து வாழ்க்கையை அவர் ‘கேக்கின் மீதான செர்ரி பழம்’ (Cherry on top) என வர்ணித்ததுடன், இந்த அற்புதமான அணியுடன் விளையாடுவதை மிகவும் ரசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes