யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் தமிழ் இராணுவ வீரர் ஒருவருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) காலை நடைபெற்றது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜாவிற்கு இந்த வீடு நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன் சுமார் 1.5 மில்லியன் ரூபா செலவில் இந்த வீடு அமைக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பயனாளிக்குக் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டம், இராணுவத்தில் சேவையாற்றும் உறுப்பினர்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சமூக நலத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
Latest News
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
23 June 2026
கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவே விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன!
Local
23 June 2026
ஜோர்தானை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியா அணி வெற்றி
Local
23 June 2026
நீதித்துறையின் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்
Local
23 June 2026
மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் இதோ!
Local
23 June 2026
சுரேஷ் சலேயை குறிவைத்து ராஜபக்சக்களை பழிவாங்க திட்டம்!
Local
23 June 2026
களுத்துறையில் 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் வாங்கிய காவல்துறை பரிசோதகர் கைது!
Local
23 June 2026
யாழ். புத்தூரில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு : இராணுவத் தளபதி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா!
Local
23 June 2026
நாளை சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் விநியோகத் தடை
Local
23 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
23 June 2026