General24 June 2026

அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து விபத்து: சாரதிக்கு திடீர் சுகயீனம்

கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.10 அளவில் அம்பாறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் பேருந்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் சாரதி மற்றும் மற்றுமொரு நபர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனப் பேருந்தின் நடத்துனர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes