General24 June 2026

மனிதர்கள் செல்ல முடியாத இடங்களிலும் கண்காணிப்பு: டெங்குவை கட்டுப்படுத்த ட்ரோன் தொழில்நுட்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத் தடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறியும் விசேட வேலைத்திட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படை, கொழும்பு மாநகர சபை மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' செயலகம் ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. இதன் மூலம், மனிதர்கள் நேரடியாகச் சென்று சோதனையிட முடியாத இடங்களை ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கும் பணிகள் கொழும்பு மாநகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டத்தின் போது, நுளம்புப் புழுக்கள் பெருகும் வாய்ப்புள்ள இடங்கள் ட்ரோன்கள் மூலம் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டன. இந்நிகழ்வில் 'க்ளீன் ஸ்ரீலங்கா' நிறுவனத்தின் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes