General28 June 2026

கொழும்பு மாநகர சபை விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கால நீடிப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நாளை (திங்கட்கிழமை) முடிவடையவிருந்த நிலையில், விசாரணைகளை நிறைவு செய்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குள் நடைபெற்ற ஊழல், மோசடி, நம்பிக்கை துரோகம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏக்கநாயக்க மற்றும் காவல்துறையின் முன்னாள் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes