General30 June 2026

"நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!" பிணையில் வெளியில் வந்த விராஜ் மக்களிடம் கோரினார்

பிரபல தனியார் உணவகம் ஒன்றின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விராஜ் விக்ரமநாயக்க,

"என் தரப்பில் தவறு நடந்துவிட்டது. முழு நாட்டு மக்களிடமும், எனது ஊழியர்களிடமும் நான் இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, எதிர்காலத்தில் ஒரு புதிய பயணத்தைத் தொடர எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes