General01 July 2026

தலைமன்னார் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

தலைமன்னார் தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ளதால், அந்தப் பாதையிலான தொடருந்து சேவைகளை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்குமாறு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புனரமைக்கப்பட்ட இந்த தொடருந்து பாதை, தொடருந்து இயக்கத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், மேலும் தாமதிக்காமல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes