Top Story
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து, எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக அதிகரிப்பதற்கு உடன்பாடு எட்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், 100 கிலோமீற்றர் வரையான பயணங்களுக்கான பேருந்து கட்டணங்களை 12 வீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரப் பயணங்களுக்கான கட்டணங்களை 20 வீதத்தினாலும் அதிகரிப்பதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விபரங்களுக்கு
General01 July 2026
தனியார் பேருந்து கட்டணம் அதிகரிப்பு! புதிய கட்டணங்கள் ஜூலை 6 முதல் அமுல்
Live Football Scores
International News

வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் : இணையவாசிகள் நெகிழ்ச்சி!

International 01 July 2026
வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் : இணையவாசிகள் நெகிழ்ச்சி!

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: ஸ்பெயின் மற்றும் பிரான்சில் 1,000க்கும் அதிகமானோர் பலி!

International 01 July 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: ஸ்பெயின் மற்றும் பிரான்சில் 1,000க்கும் அதிகமானோர் பலி!

6 நாட்களாக இடிபாடுகளுக்குள் போராட்டம் - 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

International 01 July 2026
6 நாட்களாக இடிபாடுகளுக்குள் போராட்டம் - 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

International 01 July 2026
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ட்ரம்ப்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி - புதிய நிதி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

International 01 July 2026
ட்ரம்ப்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி - புதிய நிதி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

விஜய்யின் அமைச்சரவை உறுப்பினர் மீது போதைவஸ்து முறைப்பாடு : விசாரணைகள் ஆரம்பம்!

International 01 July 2026
விஜய்யின் அமைச்சரவை உறுப்பினர் மீது போதைவஸ்து முறைப்பாடு : விசாரணைகள் ஆரம்பம்!

டோஹாவில் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் கட்டார் பிரதமர் : நேரடிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்!

International 01 July 2026
டோஹாவில் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் கட்டார் பிரதமர் : நேரடிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்!

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,943 ஆக உயர்வு; 43,000 பேர் மாயம்

International 01 July 2026
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,943 ஆக உயர்வு; 43,000 பேர் மாயம்

சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

International 01 July 2026
சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாட்களின் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

International 01 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாட்களின் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

ஆர்ஜன்டீனாவை 1-0 கோல் அடிப்படையில் வெல்லமுடியும்- கேப் வேர்ட் ஜனாதிபதியின் அசாத்திய கணிப்பு

International 01 July 2026
 ஆர்ஜன்டீனாவை 1-0 கோல் அடிப்படையில் வெல்லமுடியும்- கேப் வேர்ட் ஜனாதிபதியின் அசாத்திய கணிப்பு

142 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வராத ட்ரம்ப் கட்சியின் உறுப்பினர்: உண்மையை வெளிப்படுத்தினார்

International 01 July 2026
 142 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வராத ட்ரம்ப் கட்சியின் உறுப்பினர்: உண்மையை வெளிப்படுத்தினார்

காற்றில் தங்கத்தைக் கக்கும் அண்டார்டிகாவின் மவுண்ட் எரேபஸ் எரிமலை: புதிய ஆய்வில் தகவல்!

International 01 July 2026
காற்றில் தங்கத்தைக் கக்கும் அண்டார்டிகாவின் மவுண்ட் எரேபஸ் எரிமலை: புதிய ஆய்வில் தகவல்!

பாகிஸ்தானில் பயங்கரம்: கல்வி மையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து 14 சிறுவர்கள் உயிரிழப்பு

International 01 July 2026
பாகிஸ்தானில் பயங்கரம்: கல்வி மையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து 14 சிறுவர்கள் உயிரிழப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!

International 01 July 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!
More News
General01 July 2026

குட்டி நீர்யானைக்கு பெயரிட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அங்கு புதிதாகப் பிறந்துள்ள நீர்யானைக் குட்டிக்கு பெயரிடுவதற்கான விசேட வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 18 வயதிற்குட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்த நீர்யானைக் குட்டிக்கான பெயர்களைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்க முடியும். தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் 90ஆவது ஆண்டு நிறைவு வரும் ஜூலை 3 அன்று கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டே இந்தத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் இந்த நீர்யானைக் குட்டியை முதல்முறையாகப் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 1936ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தெஹிவளை மிருகக்காட்சிசாலையானது, கடந்த 9 தசாப்தங்களாக இலங்கையில் வனவிலங்கு பாதுகாப்பு, விலங்கு நலம், ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த விசேட கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

விபரங்களுக்கு
குட்டி நீர்யானைக்கு பெயரிட மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு!
General01 July 2026

ஜனாதிபதி அநுரவிடம் மாயக்கோல் கையளிக்கப்படவில்லை : வங்குரோத்தடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டது – அமைச்சர் வசந்த சமரசிங்க

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றபோது அவரிடம் மாயக்கோல் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மாறாக, வங்குரோத்தடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் - விஜயபுர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்று சுமார் இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இந்த இரண்டு வருடங்களுக்குள் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். வாகனங்கள், உரம், எண்ணெய்யை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலையிலேயே அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் எனவும் அமைச்சர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியும் ஸ்தம்பிதமடைந்திருந்தமையே உண்மை நிலைமையாக இருந்தது என அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

விபரங்களுக்கு
ஜனாதிபதி அநுரவிடம் மாயக்கோல் கையளிக்கப்படவில்லை : வங்குரோத்தடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டது – அமைச்சர் வசந்த சமரசிங்க
General01 July 2026

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் : குருநாகல் - கலேவெல முதலாம் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் கீழ், குருநாகல் முதல் கலேவெல வரையான முதலாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.குருநாகல் முதல் தம்புள்ளை வரையான இந்த 4ஆம் கட்டத் திட்டத்திற்கான அனுமதி, கடந்த 2026 மார்ச் 3ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இதற்கான நிதி ஏற்பாடுகளைத் தீர்மானிப்பதற்காகப் பொருளாதார முகாமைத்துவத்துக்கான விசேட குழு நடத்திய கலந்துரையாடல்களின் பின்னர், இந்த திட்டத்தை இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய, குருநாகல் முதல் கலேவெல வரையான 38.5 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட முதலாம் கட்டப் பணிகள், இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன.இதேவேளை, இந்த திட்டத்தில் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் பெருமளவில் பங்கெடுப்பதை உறுதி செய்யும் வகையில் கொள்முதல் செயல்முறைகளை முன்னெடுப்பதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விபரங்களுக்கு
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் : குருநாகல் - கலேவெல முதலாம் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்
General01 July 2026

மாஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!

நீர்கொழும்பு - கொச்சிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாஓயாவில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கொச்சிக்கடை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, காவல்துறையினர் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளவர் யோகியான பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஆவார்.காணாமல் போன இளைஞர் மேலும் சிலருடன் மாஓயாவிற்கு சென்று நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிப்பதற்காக இலங்கை கடற்படையின் உதவியுடன் கொச்சிக்கடை காவல்துறையினர் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

விபரங்களுக்கு
மாஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!
General01 July 2026

பொது அவசரகால நிலைமையை நீடிப்பதில்லை என அரசாங்கம் முடிவு: அமைச்சரவைப் பேச்சாளர்

அமுலில் உள்ள பொது அவசரகால நிலைமையை இந்த மாதத்திலிருந்து நீடிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளிப் பாதிப்புகளைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கைப் பேணுதல் மற்றும் அத்தியாவசியச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடு தழுவிய ரீதியில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
பொது அவசரகால நிலைமையை நீடிப்பதில்லை என அரசாங்கம் முடிவு: அமைச்சரவைப் பேச்சாளர்
International News

வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் : இணையவாசிகள் நெகிழ்ச்சி!

International 01 July 2026
வெனிசுவேலா நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் : இணையவாசிகள் நெகிழ்ச்சி!

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: ஸ்பெயின் மற்றும் பிரான்சில் 1,000க்கும் அதிகமானோர் பலி!

International 01 July 2026
ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: ஸ்பெயின் மற்றும் பிரான்சில் 1,000க்கும் அதிகமானோர் பலி!

6 நாட்களாக இடிபாடுகளுக்குள் போராட்டம் - 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

International 01 July 2026
6 நாட்களாக இடிபாடுகளுக்குள் போராட்டம் - 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

International 01 July 2026
134 படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ட்ரம்ப்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி - புதிய நிதி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

International 01 July 2026
ட்ரம்ப்பின் கிரிப்டோ வணிகம் அமோக வளர்ச்சி - புதிய நிதி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

விஜய்யின் அமைச்சரவை உறுப்பினர் மீது போதைவஸ்து முறைப்பாடு : விசாரணைகள் ஆரம்பம்!

International 01 July 2026
விஜய்யின் அமைச்சரவை உறுப்பினர் மீது போதைவஸ்து முறைப்பாடு : விசாரணைகள் ஆரம்பம்!

டோஹாவில் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் கட்டார் பிரதமர் : நேரடிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்!

International 01 July 2026
டோஹாவில் அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் கட்டார் பிரதமர் : நேரடிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தது ஈரான்!

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,943 ஆக உயர்வு; 43,000 பேர் மாயம்

International 01 July 2026
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,943 ஆக உயர்வு; 43,000 பேர் மாயம்

சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

International 01 July 2026
சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாட்களின் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

International 01 July 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாட்களின் பின் இடிபாடுகளுக்குள் இருந்து 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு!

ஆர்ஜன்டீனாவை 1-0 கோல் அடிப்படையில் வெல்லமுடியும்- கேப் வேர்ட் ஜனாதிபதியின் அசாத்திய கணிப்பு

International 01 July 2026
 ஆர்ஜன்டீனாவை 1-0 கோல் அடிப்படையில் வெல்லமுடியும்- கேப் வேர்ட் ஜனாதிபதியின் அசாத்திய கணிப்பு

142 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வராத ட்ரம்ப் கட்சியின் உறுப்பினர்: உண்மையை வெளிப்படுத்தினார்

International 01 July 2026
 142 நாட்கள் நாடாளுமன்றத்துக்கு வராத ட்ரம்ப் கட்சியின் உறுப்பினர்: உண்மையை வெளிப்படுத்தினார்

காற்றில் தங்கத்தைக் கக்கும் அண்டார்டிகாவின் மவுண்ட் எரேபஸ் எரிமலை: புதிய ஆய்வில் தகவல்!

International 01 July 2026
காற்றில் தங்கத்தைக் கக்கும் அண்டார்டிகாவின் மவுண்ட் எரேபஸ் எரிமலை: புதிய ஆய்வில் தகவல்!

பாகிஸ்தானில் பயங்கரம்: கல்வி மையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து 14 சிறுவர்கள் உயிரிழப்பு

International 01 July 2026
பாகிஸ்தானில் பயங்கரம்: கல்வி மையத்தின் கூரை இடிந்து வீழ்ந்து 14 சிறுவர்கள் உயிரிழப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!

International 01 July 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!
Sports Stories
Explore More
கொங்கோவின் ஆரம்ப அதிர்ச்சி – மீண்டெழுந்து இங்கிலாந்து திரில் வெற்றி!

கொங்கோவின் ஆரம்ப அதிர்ச்சி – மீண்டெழுந்து இங்கிலாந்து திரில் வெற்றி!

கால்பந்து தொடரின் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், கொங்கோ ஜனநாயக குடியரசை இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற அடிப்படையில்  வெற்றிக்கொண்டது.பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே கொங்கோ ஜனநாயக குடியரசு அணி கடும் அதிர்ச்சியளித்தது. ஆட்டம் தொடங்கிய 7ஆவது நிமிடத்திலேயே சி. எம்பெம்பா கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பயன்படுத்தி, கொங்கோ அணியின் பி. சிபெங்கா அதிரடியாக ஒரு கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இந்த ஆரம்ப கோலினால் இங்கிலாந்து அணி கடும் அழுத்தத்துக்குள்ளானதுடன், முதற்பாதி ஆட்டநேர முடிவில் கொங்கோ அணி 1 - 0 என முன்னிலையில் இருந்து அதிர்ச்சியளித்தது.இருப்பினும், இரண்டாவது பாதியில் ஆட்டத்தைத் தன்வசப்படுத்திய இங்கிலாந்து அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராடியது. இந்த போராட்டத்துக்கு ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஏ. கோர்டன் பரிமாற்றி கொடுத்த பந்தை இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஹரி கேன் துல்லியமாகக் கோலாக மாற்றி ஆட்டத்தை 1 - 1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.அதனைத் தொடர்ந்து ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே இருந்த வேளையில், 86ஆவது நிமிடத்தில் மீண்டும் ஏ. கோர்டன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை ஹரி கேன் இரண்டாவது கோலாக மாற்றி அசத்தினார். இதன் மூலம் ஆரம்பத்தில் கொங்கோ அளித்த அதிர்ச்சியிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்து அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

விபரங்களுக்கு
ஸ்ரீசாந்த் மீதான 3 ஆண்டு தடையை கேரள கிரிக்கெட் சங்கம் நீக்கியது

ஸ்ரீசாந்த் மீதான 3 ஆண்டு தடையை கேரள கிரிக்கெட் சங்கம் நீக்கியது

கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்ததாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்டிருந்த 3 ஆண்டு தடையை நீக்க கேரள கிரிக்கெட் சங்கம் ஏகமனதாக முடிவு செய்துள்ளது. இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஸ்ரீசாந்த் நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதத்தை சமர்ப்பித்தார். இதனை இன்று நடைபெற்ற விசேட பொதுக்குழு கூட்டத்தில் பரிசீலித்த கேரள கிரிக்கெட் சங்கம், தடையை நீக்க ஒப்புதல் அளித்ததுடன், எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.இந்த தடை நீக்கத்தின் மூலம், கேரள கிரிக்கெட் லீக் சீசன் 3 இல் 'ஏரிஸ் கொல்லம் செய்லர்ஸ்' அணியின் இணை உரிமையாளராக அவர் தொடர்ந்து செயல்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த், சர்வதேச அளவில் 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அயர்லாந்து மண்ணில் ஏற்பட்ட தோல்விக்கு இதுவா காரணம்? ஸ்ரேயஸ் ஐயர் விளக்கம்!

அயர்லாந்து மண்ணில் ஏற்பட்ட தோல்விக்கு இதுவா காரணம்? ஸ்ரேயஸ் ஐயர் விளக்கம்!

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சந்தித்த அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீண்டு வர இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகின்றது.   இந்தநிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் மைதானத்தை விட இங்கிலாந்தின் சூழ்நிலைகள் தங்களுக்கு நன்கு பரிச்சயமானவை என்று தெரிவித்துள்ளார். பெல்ஃபாஸ்ட் மைதானத்தின் சூழல் ஒரு சர்வதேச மைதானத்தைப் போல இருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய சூழலில் பந்துவீச்சு வியூகங்களை அமைப்பது எங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இங்கிலாந்து மைதானங்கள் இந்திய அணிக்கு நன்கு பழகிய ஒரு சூழலை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, பெல்ஃபாஸ்ட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா இழந்திருந்தது. அந்த தொடரின் முடிவில், அயர்லாந்து அணி அங்கிருந்த சூழ்நிலைகளை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி, தகுதியான வரலாற்று வெற்றியைப் பெற்றதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
அயர்லாந்துடனான அதிர்ச்சித் தோல்வி: இங்கிலாந்து ஆடுகளங்கள் பரிச்சயமானவை என்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்

அயர்லாந்துடனான அதிர்ச்சித் தோல்வி: இங்கிலாந்து ஆடுகளங்கள் பரிச்சயமானவை என்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்

அயர்லாந்து அணிக்கு எதிரான 20க்கு20 தொடரில் சந்தித்த அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வலுவாகத் தொடங்குவதற்கு இந்திய அணி தயாராகி வருவதாக, இந்திய 20க்கு20 அணியின் புதிய தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20க்கு20 போட்டிக்கு முன்னதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) மைதானத்தின் சூழல் ஒரு சர்வதேச மைதானத்தைப் போல இருக்கவில்லை என ஸ்ரேயாஸ் ஐயர் சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு ஆடுகளத்தின் வெளிப்பகுதி சமமாக இருக்கவில்லை. அத்துடன் மைதானத்தின் எல்லைகளும் ஒரு சதுர வடிவில் வித்தியாசமாக அமைந்திருந்தன. வழக்கமான மைதானங்களைப் போல இல்லாததால் அங்கு களத்தடுப்பே தங்;களுக்குப் புதுமையாகவும் கடினமாகவும் இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் பெல்ஃபாஸ்ட் மைதானத்துடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் ஆடுகளங்கள் இந்திய அணிக்கு மிகவும் பரிச்சயமானவை என அவர் கூறியுள்ளார். அங்கு மைதான எல்லைகள் வழமையான சர்வதேச தரத்தில் சமமாக உள்ளன. அத்துடன் உண்மையான ஒரு சர்வதேச மைதான உணர்வைத் தருகிறது. ரசிகர்களின் வருகையும் தீவிரமாக இருக்கும். தாங்கள் ஏற்கனவே இதுபோன்ற ஆடுகள சூழல்களில் விளையாடிப் பழகியவர்கள்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மோசமாக இழந்திருந்தது. அந்த தொடரின் தோல்விக்கு ஆடுகள சூழலை அயர்லாந்து வீரர்கள் மிகச்சிறப்பாகப் பயன்படுத்தியதே காரணம் என்றும், அவர்களின் வரலாற்று வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு
சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி

சுவீடனை வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி

கால்பந்து செம்பியன்ஷிப் தொடரின் 32 அணிகளுக்கான நொக்-அவுட் சுற்றில், நட்சத்திர வீரர் கெலியன் எம் பாப்பேயின் இரட்டை கோல் உதவியுடன் சுவீடன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, 16 அணிகளுக்கான அடுத்த சுற்றில் (Round of 16) பராகுவே அணியை எதிர்கொள்ள பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் 80,663 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப்போட்டியில் பிரான்ஸ் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் எம்;பாப்பே பிரான்ஸ் அணியின் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 53ஆவது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே வழங்கிய பந்தைக் கொண்டு பிராட்லி பார்கோலா இரண்டாவது கோலை அடித்தார். பின்னர் ஒலிசேயின் துணையுடன் மெம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடித்து பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் ;போட்டியில் அடித்த இரட்டை கோல்களின் மூலம், நடப்பு செம்பியன்ஷிப் தொடரில் அதிக கோல் அடித்தவர்களுக்கான பட்டியலில் 6 கோல்களுடன் லியோனல் மெஸ்ஸியுடன் எம்;பாப்பே முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் வரலாற்றில் தனது ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ள 27 வயதான எம்பாப்பே, மெஸ்ஸியின் சாதனையான 19 கோல்களை முறியடிப்பதற்கு இன்னும் ஒரு கோல் மாத்திரமே தேவையாகவுள்ளது. முன்னதாக 1998 ஆம் ஆண்டு பிரான்ஸ் செம்பியன்ஷிப்பை வென்ற போது, 16 அணிகளுக்கான சுற்றில் இதே பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்த வரலாற்று நினைவுகளுடன் பிரான்ஸ் அணி, அந்த அணியுடன் அடுத்த போட்டிக்குத் தயாராகிறது.

விபரங்களுக்கு
மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் வேகப்பந்து வீச்சு கடந்த கால வீரர்களை நினைவுபடுத்துகிறது: சிதத் வெத்திமுனி பாராட்டு

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் வேகப்பந்து வீச்சு கடந்த கால வீரர்களை நினைவுபடுத்துகிறது: சிதத் வெத்திமுனி பாராட்டு

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் வெளிப்படுத்திய திறமையானது, கடந்த கால புகழ்பெற்ற கரீபியன் வேகப்பந்து வீச்சு வீரர்களை நினைவுபடுத்துவதாக இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு உறுப்பினருமான சிதத் வெத்திமுனி பாராட்டியுள்ளார். இந்தப் போட்டியில் இலங்கையின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கீமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அல்சாரி ஜோசப் மற்றும் ஷமார் ஜோசப் ஆகியோரின் பந்துவீச்சு "அற்புதமானது" என சிதத் வெத்திமுனி வர்ணித்துள்ளார். இந்த ஜோடி, கடந்த கால வீரர்களான ஜோயல் கார்னர், மல்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் மற்றும் எண்டி ரொபர்ட்ஸ் ஆகியோரின் பந்துவீச்சைத் தனக்கு நினைவூட்டியதாகவும், அவர்களின் வேகத்துக்கு இலங்கையிடம் பதில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி சந்தித்த இந்தத் தோல்வியின் போது அனைத்துத் துறைகளிலும் அணி பின் தங்கியிருந்ததாகக் குறிப்பிட்ட வெத்திமுனி இடது கை சுழற்பந்து வீச்சாளர் சோனால் தினுஷவின் ஆட்டம் மாத்திரம் ஒரு சிறப்பாக அமைந்ததாக சுட்டிக்காட்டினார். கிரிக்கெட்டில் இதெல்லாம் சாதாரணமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட பழக வேண்டும். இதன் மூலம் அவர்கள் இரண்டாவது டெஸ்டில் வலுவாக மீண்டெழுவார்கள் என்று தாம் நம்புவதாக வெத்திமுனி குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகளின் இந்த வெற்றியானது சர்வதேச கிரிக்கட் சம்மேளன டெஸ்ட் செம்பியன்ஷிப் 2025-27 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பெற்ற முதலாவது வெற்றியாகும். இதற்கு முன்னர் விளையாடிய 8 போட்டிகளில் அந்த அணி, 7 தோல்விகள் மற்றும் ஒரு சமநிலையுடன் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியிருந்தது.

விபரங்களுக்கு
 ஐவரி கோஸ்ட்டை தோற்கடித்த நோர்வே

ஐவரி கோஸ்ட்டை தோற்கடித்த நோர்வே

2026 கால்பந்தாட்ட செம்பியன்ஷிப் தொடரின் 32 அணிகளுக்கான சுற்றில் நோர்வே அணி ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டுள்ளது. அமெரிக்க டல்லாஸ் டெக்சாஸில் இந்த போட்டி இடம்பெற்றது. கால்பந்து செம்பியன்ஷிப் வரலாற்றில் நோர்வே அணி நொக்-அவுட் சுற்றில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் நோர்வே அணி 16 அணிகளுக்கான அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அங்கு நோர்வே அணி பிரேசில் அணியை எதிர்கொள்ளவுள்ளது இந்தநிலையில் நோர்வேயின் நட்சத்திர வீரர் ஏர்லிங் ஹாலாண்ட், தனது முதல் மூன்று கால்பந்தாட்ட செம்பியன்ஷிப்; போட்டிகளிலும் தொடர்ந்து கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1954 இல் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் இந்தச் சாதனையைச் செய்திருந்தார். ஐவரி கோஸ்ட் அணி தனது கால்பந்து செம்பியன்ஷிப் வரலாற்றில் முதன்முறையாக நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த நிலையில், இந்தப் போட்டியில் 74ஆவது நிமிடத்தில் அமத் தியல்லோ அடித்த கோல் மூலம் ஆட்டத்தைச் சமன் செய்து கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் 86ஆவது நிமிடத்தில் ஹாலாண்ட் அடித்த கோல் நோர்வேயின் வெற்றியை உறுதி செய்தது.

விபரங்களுக்கு
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.நோட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்துக்கு முன்னதாக, இங்கிலாந்து அணி வீரர்களிடம் தனது ஓய்வு முடிவை ஸ்டோக்ஸ் பகிர்ந்துகொண்டார். அந்த தருணத்தில் மிகவும் உணர்ச்சிகரமாகக் காணப்பட்ட அவர், இந்த அணிக்காகவும், சக வீரர்களுக்காகவும் தான் இதுவரை பலமுறை களத்தில் போராடியிருப்பதாகவும், இது தனது கடைசிப் பயணமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் இந்த அணி தனது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது ஒரே வேண்டுகோள் என்றும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.35 வயதான ஸ்டோக்ஸ், சமீபத்தில் லண்டன் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் சிக்கியதால், இங்கிலாந்தின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. அந்தச் சம்பவத்தில் இங்கிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரியும் சம்பந்தப்பட்டிருந்ததனால், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் ஆதரவு குறித்த கேள்விகள் எழுந்திருந்தன. இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த ஓய்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பென் ஸ்டோக்ஸ் 2019 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அவரது அதிரடியான 84 ஓட்டங்கள் இங்கிலாந்து முதன்முறையாக உலகக்கிண்ணத்தை வெல்லக் காரணமாக அமைந்தது. அதேபோல 2019 ஏஷஸ் தொடரில் 135 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தமை இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் பேசப்படும் வரலாற்றுச் தருணமாகும். தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7,243 ஓட்டங்களையும், 251 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள பென் ஸ்டோக்ஸ், கேரி சோபர்ஸ் மற்றும் ஜெக் கெல்லிஸ் ஆகிய ஜாம்பவான்களுக்கு இணையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ஓட்டங்கள் மற்றும் 250 விக்கெட்டுகளைக் கடந்த வீரர்களில் ஒருவராவார்.இந்தநிலையில் பென் ஸ்டோக்ஸின் ஓய்வின் பின்னர் ஹரி புரூக் அணியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கவுள்ள தொடரிலிருந்து இங்கிலாந்து அணி புதிய தலைவருடன் களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
Business Stories
Explore More
 ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

ஒப்பற்ற எரிபொருள் சிக்கனத்துடன் இலங்கையின் வீதிகளை அலங்கரிக்கவுள்ள TVS Sport 110

நாட்டில் உயர் ரக மோட்டார் வாகன விநியோக நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற TVS Lanka (Pvt) Ltd, இலங்கை மக்களுக்கு ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நம்பிக்கையான புதிய சகாப்தொன்றுக்கு வழிவகுத்துள்ளது. அந்த வகையில், புத்தம் புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.உலகளவில் அங்கீகாரம் பெற்ற TVS Sport 110 மோட்டார் வாகனத்தின் புதிய வடிவமைப்புப்பானது பிரயாணத் துறையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கது. ஒப்பற்ற எரிபொருள் சிக்கனம் மற்றும் நவீன வடிவமைப்புடன் மேம்பட்ட செயல்திறனுடன் இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 'மைலேஜ் கிங்' (Mileage King) என பிரபலமாக அறியப்படுகின்ற TVS Sport 110, எரிபொருள் பாவனையில் சிக்கனம் கொண்ட 109.7cc Duralife இயந்திரத்தைக் கொண்டது. 100cc இயந்திர வலுப் பிரிவில் TVS Motor நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற ET-Fi (Eco-Thrust Fuel Injection) தொழில்நுட்பத்தைக் கொண்ட முதலாவது மற்றும் ஒரேயொரு மோட்டார் சைக்கிள் இது மாத்திரமே என்பது சிறப்பம்சம். இந்த மேம்பாடானது எரிபொருள் பாவனையின் சிக்கனத்தை 15% ஆல் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், லிட்டருக்கு 80 கிமீ என்ற ஒப்பற்ற மைலேஜ் பாவனைக்கும் வழிவகுத்துள்ளது. சீரான இயந்திர வலுவைக் கொண்டுள்ளதுடன், நீண்ட நேரம் அணைத்து வைக்கப்பட்ட இயந்திரத்தை சிறப்பாக மீண்டும் இயக்கும் இயல்பானது.புத்தாக்கமிக்க பக்கவாட்டு ஸ்டாண்ட் குறியீடு, பக்கவாட்டு ஸ்டாண்ட் போடப்படும் போது தானாகவே அணைந்து விடும் இயந்திரம் ஆகிய தொழில்நுட்பங்களை இப்புதிய TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் கொண்டுள்ளன. பிரேக்குகளைப் பிரயோகிக்கும் போது உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு 'synchronised braking technology' (SBT) என்ற தொழில்நுட்பத்தையும் அது கொண்டுள்ளது. பின்புறத்தில் சீர் செய்யக்கூடிய ஐந்து படிப்புக்கொண்ட hydraulic shock absorber மற்றும் சோர்வில்லாத நீண்டதூரப் பயணத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆசனங்கள் ஆகிய சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.“இலங்கையில் மோட்டார் சைக்கிள் பிரயாணிகள் இரண்டு அடிப்படை விடயங்களுக்கு தற்போது முன்னுரிமையளித்து வருகின்றனர். மிக நீண்ட கால உழைப்பு மற்றும் உச்ச எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுக்கு அவர்கள் முதலிடம் அளிக்கின்றனர். TVS Sport 110 மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அவர்களின் எதிர்பார்ப்புக்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதை வெறுமனே ஒரு வாகனம் என்று கூறிவிடுவதன் நின்று விட முடியாது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தரம் மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றிற்கு எவ்விதமான குறைவுமின்றி தமது பிரயாணங்களை மேற்கொள்ள விரும்புகின்ற கடின உழைப்பாளிகள் மற்றும் அன்றாடம் பிரயாணிப்பவர்களுக்கான உகந்த தீர்வாக இது காணப்படுகின்றது.” என்று TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கீதால் அந்தனி அவர்கள் கருத்து தெரிவித்தார்.அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ள TVS Sport 110 மோட்டார் சைக்கிள்கள் உயர்ரக 3D chrome இலச்சினைகள், பளபளப்பான தோற்றத்தைக் கொண்ட LED DRL விளக்குகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல்-அனலொக் கட்டுப்பாட்டு முகத்திரை போன்ற சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இலங்கையின் பல்வேறுபட்ட வீதி அமைப்புக்களுக்கு உகந்ததாக தரைக்கும், மோட்டார் சைக்கிளின் அடிப்பாகத்திற்கும் இடையில் 175 மிமீ தாராள இடைவெளியையும் கொண்டுள்ளது.கருப்பு நியோன் மற்றும் பழுப்பு சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வர்ணங்களில் TVS Sport 110 மோட்டார் சைக்கிள் வெளிவருவதுடன், TVS Lanka நாடளாவிய ரீதியில் கொண்டுள்ள பரந்தளவிலான வலையமைப்பினூடாக கிடைக்கப்பெறுகின்றது.“மிகச் சிறந்த வாகனத்தை வழங்குவதற்கும் அப்பால், சந்தையில் மிகக் குறைந்த தொகையில் அதனை சொந்தமாக்கிக் கொள்ள உறுதி செய்வதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். உதிரிப்பாகங்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக நாடெங்கிலும் 400 க்கும் மேற்பட்ட வலையமைப்பு மையங்களை நாம் நிறுவியுள்ளோம். அவற்றினூடாக சந்தையில் அசல் உதிரிப்பாகங்களை மிகவும் சிக்கனமாக ஆகக் குறைந்த விலைகளில் நாம் வழங்குகின்றோம். உதிரிப்பாகங்கள் 100% கிடைப்பதை TVS Lanka உறுதிப்படுத்துவதுடன், அசல் பாகங்கள் அனைத்திற்கும் முழுமையான உத்தரவாதத்தையும் வழங்குகின்றது. எம்மிடம் மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் முழுமையான மன நிம்மதியுடன், தங்குதடையின்றி போக்குவரத்து செய்வதை நாம் உறுதி செய்கின்றோம்,” என்று TVS Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பின்னரான செயல்பாடுகளுக்கான உதவிப் பொது மேலாளர் இந்திக புஷ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.ஐந்து ஆண்டுகள் அல்லது 76,000 கிமீ என்ற முழுமையான உத்தரவாதம், உதிரிப்பாகங்களை குறைந்த விலைகளில் தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளல், மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை வழங்குவதற்கான பிரத்தியேக அணி ஆகியவற்றின் பக்கபலத்துடன், மோட்டார் சைக்கிள் துறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் சிறந்த தரத்தரங்களை TVS Lanka நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.உங்களுக்கு அருகாமையிலுள்ள TVS காட்சி அறைக்கு வருகை தந்தோ அல்லது www.tvslanka.lk என்ற இணையத்தளம் மூலமாகவோ, அல்லது 0114 600 500 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியோ மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.TVS Lanka (Pvt) Ltd நிறுவனம் தொடர்பான விபரங்கள்இந்தியாவைத் தளமாகக் கொண்ட TV Sundram Iyengar and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழ் ஒரு துணை நிறுவனமாக TVS Lanka (Pvt) Ltd இயங்கி வருகிறது. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாக விளங்குகின்றது. புத்தாக்கம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றுக்கு இது பெயர்பெற்றுள்ளதுடன், தனது வரலாற்றில் பல அங்கீகாரங்களையும், பாராட்டுக்களையும் அது சம்பாதித்துள்ளது. TVS வர்த்தகநாமம் மற்றும் பல்வேறுபட்ட வர்த்தகநாமங்களின் UCAP சேவைகளுக்கான பிரத்தியேக சேவை மையங்களை TVS Lanka இயக்கி வருகின்றது. நாடெங்கிலும் 2,000 க்கும் மேற்பட்ட முகவர் மையங்களுடன், நாடளவில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தரம் மற்றும் இலகுவாக கிடைக்கப்பெறுதல் ஆகியவற்றை TVS Lanka உறுதி செய்து வருகின்றது.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் பஜாஜ் ஸ்கூட்டர் மீண்டும் புதிய பரிமாணத்தில்

டேவிட் பீரிஸ் குரூப் ஒஃப் கம்பனிஸ் நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவான டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவேட்) லிமிடெட், Bajaj Chetak ஸ்கூட்டரை பெருமையுடன் மீள அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.    இதன் மூலம் இலங்கையின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Chetak, மின்சார யுகத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது.    1978 ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட Bajaj Chetak, மிக விரைவாக இல்லங்கள் தோறும் இடம்பிடித்த ஒரு பெயராக மாறியதுடன், நாடு முழுவதும் உள்ள பல தலைமுறை பயணிகளின் நம்பிக்கையையும் வென்றெடுத்தது.    ஜப்பானிய மோட்டார் சைக்கிள்கள் ஆதிக்கம் செலுத்திய காலப்பகுதியிலும் கூட, Chetak ஸ்கூட்டர்களுக்கான கேள்வி அதிகரித்துக் காணப்பட்டது.    இது இலங்கை நுகர்வோர் மத்தியில் காணப்பட்ட ஈடிணையற்ற நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் உறுதிப்படுத்துகிறது.    47 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட Chetak, தற்போது அதே நம்பிக்கையுடனும் நீடித்து உழைக்கும் தன்மையுடனும் நவீன மின்சார தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வசதிகளுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.    நவீன நகரப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ள Bajaj Chetak Electric Scooter, 3.1 kW hub motor மற்றும் 3.5 kWh lithium-ion பற்றரியைக் கொண்டுள்ளது.    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கி.மீ (IDC range) வரை பயணிக்கக்கூடிய சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.    அத்துடன், மணித்தியாலத்திற்கு 63 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், ஆற்றல், வினைத்திறன் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான வசதி ஆகியவற்றுக்கிடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்குகிறது.    வலுவான Steel Unibody கட்டமைப்பைக் கொண்டுள்ள Chetak, உயர்தரமான பயண அனுபவத்தையும் நீண்டகால நீடித்து உழைக்கும் தன்மையையும் வழங்குவதன் மூலம் தனது பிரிவில் உள்ள ஏனைய வாகனங்களிலிருந்து தனித்து நிற்கிறது.    அத்துடன், தனது பிரிவிலேயே ஆகக்கூடிய அளவான 35 லீற்றர் Under-seat storage வசதியையும் கொண்டுள்ளமையால், அன்றாடப் பயணம் மற்றும் நவீன நகர வாழ்க்கை முறைக்கு இது ஒரு மிகச்சிறந்த தெரிவாக அமைகிறது.    சந்தையில் உள்ள ஏனைய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், Bajaj Chetak அதிக ஆற்றலையும், சிறந்த பயணத் தூரத்தையும் வழங்குகிறது.    இந்த ஸ்கூட்டர், முழுமையான Digital display, புளூடூத் ஊடாக இணைக்கப்படக்கூடிய App connectivity, Eco மற்றும் Sports ஆகிய இரண்டு Riding modes போன்ற பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.    அத்துடன், Hill Hold Assist, Reverse mode, Music and call notifications போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சௌகரியமான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பயண அனுபவத்தை உறுதி செய்கிறது.    இந்த அறிமுகத்திற்கு முன்னதாகவே, விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2,000 நாடளாவிய விற்பனை மற்றும் சேவை நிலையங்களில், பரிசோதனை உபகரணங்கள், கண்டறியும் ஸ்கானர்கள், பயிற்சி பெற்ற சேவை நிபுணர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பிரத்தியேக வசதிகளை DPMC நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.    இதன் மூலம், வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு ஈடிணையற்ற ஆதரவையும் இலகுவான அணுகலையும் வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கிறது.    டேவிட் பீரிஸ் E-Mobility நிறுவனமானது, Bajaj Chetak ஸ்கூட்டரின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கையின் அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் 20,000 கிலோமீற்றர்களுக்கும் அதிகமான தூரம் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.    இந்த வெற்றிகரமான களப்பரிசோதனைகளின் பின்னரே இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் விரிவான நாடளாவிய விற்பனைக்குப் பிந்தைய சேவை வலையமைப்பானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலன் மீதான அக்குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.    அத்துடன், Bajaj Chetak பயனர்களுக்கு இலங்கையின் முதலாவது இரு சக்கர வாகனங்களுக்காக வழங்கப்படும் 24/7 வீதியோர அவசர உதவிச் சேவை வழங்கப்படுவதால், எவ்வித கவலையுமின்றி மனநிம்மதியுடன் பயணிக்க முடியும்.    வாடிக்கையாளர் டேவிட் பீரிஸ் E-Mobility ஐ 011 470 0550எனும் ஹொட்லைன் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.    24/7 வீதியோர அவசர உதவிச் சேவையை 011 4 700 551 ஊடாக பெற முடியும்.    Chetak காட்சியறை இல. 08, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல எனும் முகவரியில் அமைந்துள்ளது.    Bajaj Chetak அறிமுகத்துடன், டேவிட் பீரிஸ் E-Mobility (பிரைவட்) லிமிடெட், இலங்கையை நிலைபேறான மற்றும் முன்னணி மின்சார போக்குவரத்து முறைமைக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதுடன், பல தலைமுறைகளின் விருப்பத்திற்குரிய தெரிவை, எதிர்காலத்திற்கு பொருத்தமான வகையில் கொண்டு வந்துள்ளது.

விபரங்களுக்கு
தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம்

சியபத பினான்ஸ் தடையற்ற தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்துள்ளது.    தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமனம் பெற்றதுடன் ஆனந்த செனவிரத்ன நிர்வாக இயக்குநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார்.    2026 ஜனவரி 1, முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக மதிஷ ஹேவாவிதாரண நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனம் சியபதவின் உள்ளக திறமை மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.    நிறுவனத்தின் முன்னோடி உறுப்பினரான ஹேவவிதாரன, 2005 இல் சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராக நிறுவனத்தில் சேர்ந்தார்.    20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பதவிகளில் உயர்ந்து, 2021 முதல் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஆகவும், 2025 முதல் தலைமை மூலோபாய அதிகாரி ஆகவும் பணியாற்றினார்.    ஆனந்த செனவிரத்னவின் வெளிச்செல்லும் தலைமையின் கீழ், சியபத பைனான்ஸ் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் துறையில் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியது.    சியபத பினானஸ் பிஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் உரிமம் பெற்ற ஒரு முன்னணி நிதி நிறுவனமாகும், மேலும் இது சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழுமையான துணை நிறுவனமாகும்.    இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனம், குத்தகை, தங்கக் கடன்கள், தரகு, வணிகக் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது.    சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்தருநர் வர்த்தக விருதுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக “சிறந்த தொழில்தருநர் வர்த்தக முத்திரை” என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.    இந்த விருது, தொழில்தருநர் வர்த்தக முத்திரையிடலில் நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் புதுமையான உத்திகளை அங்கீகரிக்கிறது, இது ஊழியர் ஈடுபாடு, தக்கவைத்தல் மற்றும் ஊக்கமளிக்கும் பணியிட கலாசாரத்தை உருவாக்குவதற்கான அதன் வலுவான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

விபரங்களுக்கு
நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

நிக்கவெரட்டியவில் தடம் பதிக்கின்றது சியபத பினான்ஸ்

உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, இலங்கை முழுவதும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான நிதி தீர்வுகளை வழங்குவதற்காக நிறுவனத்தின் பரந்த விரிவாக்கல் முயற்சிகளுக்கு மேலும் ஒரு மைல்கல்லாக வெற்றிகரமாக சமீபத்தில் தனது 61வது கிளையை நிக்கவெரட்டியவில் திறந்து வைத்துள்ளது.புதிய கிளையை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன திறந்து வைத்தார். தலைமை நிர்வாக அதிகாரி (நியமிக்கப்பட்ட) மதிஷ ஹேவாவிதாரண, சிரேஷ்ட நிர்வாகத்தினர், காவல்துறை அதிகாரி ஹரிசன் சோமசிறி, கிராம சேவையாளர் எச்.எம்.டி. நாமல் பண்டார ஆகியோர் அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் இந்த கிளை திறந்து வைக்கப்பட்டது.வளமான மண் மற்றும் பயிர் செய்கைக்கு ஏற்ற அமைவான நிலங்களைக் கொண்ட நிக்கவரெட்டி, அதன் விவசாய பாரம்பரியம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்காக புகழ் பெற்றுள்ளது, அங்குள்ள சமூகம் இன்றுவரை தனித்துவமான விவசாய நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்.பாரம்பரியமாகவும் வரலாற்று ரீதியாகவும் விவசாயத்திற்குப் பெயர் பெற்றிருந்தாலும், நிக்கவரெட்டி அதன் பொருளாதார அடித்தளத்தை பாரம்பரியமற்ற தொழில்துறைகளிலும் பன்முகப்படுத்தியுள்ளது. தற்போது, ​​வேலைவாய்ப்பு நிலப்பரப்பில் சேவைத் துறைஇ விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சில தசாப்தங்களாக, நிக்கவெரட்டிய ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் முதலீடுகளுக்கான மேம்பட்ட காலநிலை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பிராந்தியத்தின் நிலைப்பாடு - நவீன வீட்டுவசதி திட்டங்களின் அதிகரிப்புக்கும் வணிக வளாகங்களின் கிடைக்கும் தன்மைக்கும் வழி வகுத்துள்ளது.சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர் ஆனந்த செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில் "சியபத பினான்ஸ் எங்களுக்கு மிக உயர்ந்த திருப்தி அளிக்கும் அம்சம் என்னவெனில், நாங்கள் சென்றடையும் மக்களின் வாழ்க்கையில் எங்கள் சேவைகள் ஏற்படுத்தும் நல்விளைவுகளை காண்பதாகும்," எனவும் மேலும் கூறுகையில் "நிக்கவெரட்டிய கிளை திறப்பு நெருங்கும் போது, ​​உள்;ர் சமூகம் புதிய வழிகளுக்கு திறந்திருப்பதையும் நாங்கள் அவதானித்தோம். உதாரணமாக, டிஜிட்டல் சேவைகளில் இளைஞர்கள் வளர்ந்து வருவதையும், கைத்தறி கைவினைகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த விவசாயத் தொழிலும் படிப்படியாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதையும் நாங்கள் கவனித்தோம். இத்தகைய பின்னணியில், இந்த சமூகம் வெற்றிக்கான அடித்தளத்தை உருவாக்க உதவுவதற்கு எங்கள் ஆதரவு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் கூறினார்.குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு முதல் "ஸ்மார்ட் பே" - அதன் பில் செலுத்தும் வசதி வரை விரிவான தயாரிப்பு தொகுதியினை பெருமைப்படுத்துகிறோம், புதிய கிளை, தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்கள் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நீண்ட காலத்திற்கு அறிவார்ந்த நிதி தீர்மானங்களை ஊக்குவிக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து, ஒரு சிறிய திறப்பு விழா நடத்தப்பட்டது, மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் மற்றும் காலுறைகள் கொள்வனவு செய்வதற்கு பரிசு வவுச்சர்களை நன்கொடையாக வழங்குவதற்காக பணம் ஒதுக்கப்பட்டது.பரிசு வவுச்சர்களை சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக பணிப்பாளர். ஆனந்த செனவிரத்ன, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் திரு. மதிஷ ஹேவாவிதாரண ஆகியோர், பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நிக்கவெரட்டிய கிராம சேவையாளரின் ஒத்துழைப்புடன், திறப்பு விழாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கினர்.சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது. ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள் மூலம் A(lka) என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.037 4658105 ஐ அழைப்பினை மேற்கொள்வதன் மூலமோ அல்லது இல. 48 E, ஹீலோகம, நிக்கவெட்டிய என்ற முகவரியில் உள்ள கிளைக்கு விஜயம் செய்வதன் மூலமோ நிக்கவெட்டிய கிளையை தொடர்பு கொள்ளுங்கள். சியபத பினான்ஸ் பிஎல்சி மற்றும் அதன் சேவைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.siyapatha.lk ஐ பார்வையிடவும்.

விபரங்களுக்கு
வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

வடக்கில் வலையமைப்பை விரிவுபடுத்திய சியபத பினான்ஸ்

சியபத பினான்ஸ், மன்னாரில் புதிய கிளையுடன் வடக்கில் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது    20 வருட அனுபவமுள்ள முன்னணி நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது 58ஆவது கிளையை மன்னார் நகரில் திறந்து வைத்தது.    இது வட மாகாணத்தில் தனது வலையமைப்பை வலுப்படுத்தி, நாடு தழுவிய கிளை வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.    மன்னார் கிளை திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, தலைமை செயற்பாட்டு அதிகாரி மதிஷ ஹேவாரத்ன மற்றும் சிரேஷ்ட நிர்வாகம், கிராம சேவையாளர் என்டனி மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், தனித்துவமான கட்டிடக்கலை மற்றும் கண்கவர் அழகினை பாதுகாத்து வரும் மன்னார் மாவட்டம், பிரதான நிலப்பகுதி மற்றும் மன்னார் தீவை கொண்டுள்ளது.    15-64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுக் குழுவிற்குள் வகைப்படுத்தப்பட்டுள்ள மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், நீண்டகாலத்தில் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வுகளுக்கான கட்டாய தேவை ஒன்றினை கொண்டுள்ளதாக சியபத பினான்ஸ் அடையாளம் காட்டுகிறது.    மன்னார் நகரம் , பசுமையான காடுகள், பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் தென்னை பயிர்ச்செய்கை முதல் தரிசு நிலம் மற்றும் தடாகங்கள் வரை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட வறண்ட, மணல் தீபகற்பமாகும். தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க 53 சதவீதத்தை கொண்ட விவசாயத் துறை, பிராந்தியத்தின் பொருளாதார நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது அங்கு பெரும்பாலான உள்ளூர்வாசிகள் நெல் விளைச்சலை தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக கொண்டுள்ளனர்.    மன்னாரில் உள்ள பல மீன்பிடி கிராமங்களின் வாழ்வாதாரத்திலும் மீன்பிடித் தொழில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.    நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் ஆனந்த செனவிரத்ன, 'துடிப்பான மன்னார் நகரில் எங்கள் புதிய கிளையை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - ஏராளமான வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலம் கொண்ட ஒரு பிராந்தியம்.    எங்கள் சேவைகள் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், உலகின் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையை மாற்ற உதவுவதையும் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இதை கருத்தில் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் சென்றடைந்து, பல்வேறு தனிநபர் குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் எங்கள் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.' எனக் கூறினார்.    சமீபத்திய ஆண்டுகளில், மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற வளங்களால் இயக்கப்படும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான பரந்த ஆற்றலைக் காட்டியுள்ளது, இது உள்ளூர் பொருளாதாரங்களுக்கு புதிய வழிகளை வழங்குகிறது. பிராந்தியத்தில் உள்ள உயர்ந்த இலட்சியம் உள்ள தனிநபர்களுக்கும் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நம்பகமான நிதி ஆலோசகராக கவர்ச்சிகரமானதாக இருக்கும் இந்த புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, தங்கக் கடன், வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவான வரைவு மற்றும் தரகு அதன் கொடுப்பனவு செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே வரை பரந்த தயாரிப்பு தொகுப்பினை வழங்குகிறது.    நிறுவனத்தின் 'சியபதேன் மிஹின்கதட்ட' சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் சென்.லூசியா மகா வித்தியாலயத்தில் ஒரு சிறப்பு மரம் நடும் முயற்சியை மேற்கொண்டனர் மற்றும் மன்னாரில் உள்ள பாடசாலை மாணவர்களின் டிஜிட்டல் கல்வியின் வளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.

விபரங்களுக்கு
டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ், GWM ஆகியன இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் மற்றும் GWM ஆகியவை இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகின்றன.    டேவிட் பீரிஸ் குழுமத்தின் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (DPA), உலகளாவிய வாகனத் துறையில் முதன்மை வகிக்கும்  GWM உடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மையை அறிவித்துள்ளது.    இலங்கையில் ஹைப்ரிட் மற்றும் புதிய ஆற்றல் வாகனங்களின் (NEVs) புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்துவது இந்தக் கூட்டாண்மையின் நோக்கமாகும்.     அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு, அக்டோபர் 30 அன்று டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் (DPA) தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டேவிட் பீரிஸ் குழுமத்தின் மூத்த உறுப்பினர்களான குழுமத் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ரோஹன திஸாநாயக்க மற்றும் டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மகேஷ் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் யசந்த அபேகோன், ஆகியோர் கலந்து கொண்டனர். GWM நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைய வழியில் நிகழ்வில் இணைந்துகொண்டனர்.    இந்தக் கூட்டாண்மை, புத்தாக்கம், நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் மூலம் நாட்டின் போக்குவரத்துத் துறையின் நிலப்பரப்பை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய முன்னணி நிறுவனம், தேசத்தின் முன்னணி நிறுவனத்துடன் இணைகிறது.    இந்தப் புதிய கூட்டாண்மை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் GWM-இன் உலகளாவிய பொறியியல் சிறப்பையும், நான்கு தசாப்தங்களுக்கும் மேலான டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA)-இன் நம்பகத்தன்மை மற்றும் எளிமையான அணுகல் கொண்ட பாரம்பரியத்தையும் ஒருங்கிணைக்கிறது.      இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள்  இனிமேல் நவீன தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற தன்மைகொண்ட ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  அவுஸ்திரேலியாவில் ஹவல் H6 ரக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 5-நட்சத்திர ANCAP பாதுகாப்புத் தரச் சான்றிதழின் உறுதியுடனும், உலகின் சவாலான சந்தைகளில் கிடைத்த அனுபவத்துடனும், GWM நிறுவனம் இலங்கைச் சாலைகளுக்குச் சிறந்த செயல்திறனையும், மன அமைதியையும் கொண்டு வருகிறது.    "Go With More" என்ற GWM-இன் உலகளாவிய பிராண்ட் தத்துவத்தின் கீழ் இந்த முயற்சி, இலங்கையில் உள்ள ஓட்டுனர்களுக்கு செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகிய இரண்டிற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய நிலையை நீக்கியுள்ளதுடன் புத்திசாலித்தனமான, ஒன்றிணைக்கப்பட்ட மற்றும் அதிக நம்பிக்கையான எதிர்காலத்திற்கு அழைப்பு விடுக்கிறது.     GWM ஹைப்ரிட் ரக வாகனங்களின் அறிமுகம் டேவிட் பீரிஸ் ஓட்டோமொபைல்ஸ் (DPA) மற்றும் GWM ஆகிய நிறுவனங்களின் கூட்டாண்மையின் கீழ் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்கள்:     1. ஹவல் H6 HEV / PHEV- ரூ. 17.995 மில்லியன் (HEV)/ரூ. 20.995 மில்லியன்(PHEV)    அதிநவீன மற்றும் புத்திசாலித்தனமான SUV: நகர்ப்புற சொகுசையும், ஹைப்ரிட் வாகனத்தின் பன்முகத்தன்மையையும் இணைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சக்தி வாய்ந்த, அதேநேரம் எரிபொருள் சிக்கனமான ஓட்டத்தை வழங்குகிறது. இதில், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 12.3 அங்குல அல்ட்ரா-ஸ்மார்ட் தொடுதிரை ஆகியவை கூடுதல் அம்சங்கள்.இது குறிப்பிடத்தக்க தூய மின்சாரப் பயண வரம்பை வழங்குகிறது. இதன்மூலம், உண்மையான ஹைப்ரிட் சுதந்திரத்தையும் தினசரி பயணங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள் செலவையும் பெறலாம்.    2. ஹவல் GT பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV)-ரூ. 24.995 மில்லியன்    இது ஒரு செயல்திறன் மிக்க பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இதன் தோற்றம், தைரியமான வடிவமைப்பு மற்றும் துடிப்பான ஹைப்ரிட் சக்தி ஆகிய அம்சங்கள் தனித்துவமானவை. இது ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு நிகரான வேகத்தை வழங்குகிறது. அதாவது, வெறும் 4.9 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ/மணி வேகத்தை எட்டும். அத்துடன், பிரம்மாண்டமான 762 Nm முறுக்குவிசை (torque) திறனையும் கொண்டுள்ளது. இதன் விளையாட்டுத்தனமான வெளிப்புற வடிவமைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஓட்டுநரை மையப்படுத்தி உட்புரமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 'Alcantara-style' பாணியிலான ஸ்போர்ட் இருக்கைகள் மற்றும் ஆக்ரோஷமான வெளிப்புற வடிவமைப்பு ஆகியவை அடங்கும்.     3.டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் (HEV)-ரூ. 35.995 மில்லியன்    நகரத்தைத் தாண்டி சுதந்திரத்தை நாடும் சாகச விரும்பிகளுக்காக உருவாக்கப்பட்ட, உறுதியான ஆஃப்-ரோட் வாகனம் இது. டேங்க் 300 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV) அதன் முழு 4x4 ஆஃப்-ரோட் சேசிஸ், முன் மற்றும் பின் டிஃபரன்சியல் லாக்குகள் மற்றும் Crawl Control வசதி ஆகியவற்றின் மூலம் நவீன தேடல் அனுபவத்தை மறுவடிவமைக்கிறது. இதன் ராணுவத் தர வலிமை, இரட்டை 12.3-இன்ச் திரைகள் மற்றும் உயர்தர faux Nappa leather accents உட்புற அலங்காரம் போன்ற சொகுசான அம்சங்களால் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது.   4. டேங்க் 500 ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம் (HEV)- ரூ. 43.5 மில்லியன்    GWM-இன் முதன்மை ரக வாகனமான இந்த வாகனம் கம்பீரமான வடிவமைப்பு, ஏழு இருக்கைகள் கொண்ட வசதி மற்றும் ஹைப்ரிட்இன் சொகுசுத்தன்மை  ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. 'Nappa Leather-Accented' இருக்கைகள் (குளிரூட்டும்/மசாஜ் வசதியுடன்) மற்றும் பிரமாண்டமான 14.6-அங்குல மைய மல்டிமீடியா திரையுடன் இதன் உள்ளறை ஆடம்பரமாக அமைக்கப்பட்டுள்ளது. பாடி-ஆன்-ஃப்ரேம் சேசிஸ் (Body-on-Frame chassis: வாகனத்தின் உடல், அதன் சட்டகத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்) அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இது நிகரற்ற கம்பீரமான தோற்றத்தையும், உண்மையான ஆஃப்-ரோட் திறனையும் வழங்குகிறது. இது ஒவ்வொரு வருகையையும் ஒரு சிறப்பு நிகழ்வாக மாற்றுகிறது.    மேலதிகமாக, நிலைத்தன்மை மற்றும் அதிக செயல்திறன் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை நாடும் இலங்கை நுகர்வோருக்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DPA நிறுவனம் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ORA ரக வாகனங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது.    புத்தாக்கம் மூலம் இலங்கையின் எதிர்கால போக்குவரத்து துறையை மறுவடிவமைத்தல். புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் வாகன துறையின்  எதிர்காலத்திற்கான ஒரு மூலோபாய நகர்வாக இந்தக் கூட்டாண்மை அமைகிறது.    GWM-இன் நவீன ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பங்கள், DPA-இன் வலுவான நாடு தழுவிய சேவை வலையமைப்புடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிக சுதந்திரத்தையும், சிறந்த செயல்திறனையும், சிறந்த மதிப்பையும், அதிக நம்பிக்கையையும் வழங்குகின்றன.    நிகழ்வில் உரையாற்றிய DPA-இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மகேஷ், மேலும் கூறியதாவது: "GWM-இன் வாகனங்கள் உலகத் தரம், நம்பிக்கை மற்றும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கின்றன. டேவிட் பீரிஸ் ஆட்டோமொபைல்ஸின் நம்பகத்தன்மை மற்றும் இணையற்ற சேவையுடன் ஹைப்ரிட் செயல்திறனை அனுபவிக்கும் சுதந்திரத்தை இலங்கை மக்களுக்கு நாங்கள் வழங்குகிறோம்.   " GWM x DPA - GO WITH MORE. GWM மற்றும் DPA-வின் இந்தக் கூட்டாண்மை, வெறும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதைவிட மேலானதாகும். இது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும் ஒரு புத்திசாலித்தனமான அதிகாரத்தை போக்குவரத்து துறையில்  தொடங்கி வைக்கிறது.    GWM-இன் உலகத் தரப் புதுமை மற்றும் DPA-இன் உள்ளூர் அனுபவம் ஆகியவை கைகோர்ப்பதால், ஒவ்வொரு GWM வாகன உரிமையாளருக்கும் DPA-வின் நான்கு தசாப்த கால நாடு தழுவிய சேவை, முழுமையான உத்தரவாதம் மற்றும் தடையற்ற உதிரிப்பாக விநியோகம் ஆகியவற்றினை பெறமுடியும். இலங்கை மக்களுக்கு இது ஒரு புதிய ஓட்டுநர் அனுபவத்தைத் தொடக்கி  வைக்கிறது.    இந்த அனுபவத்தில், தொழில்நுட்பம் உங்கள் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறது, விரிவான தேர்வு உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது, மற்றும் எதிர்வரும் பாதை அதிக சுதந்திரத்திற்கும் , உறுதியான நம்பிக்கைக்கும்  உத்தரவாதம் அளிக்கிறது.  

விபரங்களுக்கு
 வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

வெற்றி பெற்ற மாணவர்களுக்காக கொழும்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்திய கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ

இலங்கையில் மிக பிரசித்தமான புலமைப் பரிசில் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோவினால் (Hayeshika Fernando), இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று Monarch Imperial Hotel வளாகத்தில், கடந்த 20ம் திகதி நடைபெற்றது. Queens Education Campus நிறுவனத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு நான்காவது முறையாகவும் நடந்துள்ளது.கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ, இன்றளவில் இலங்கையில் மிகப் பிரசித்தமான, மதிப்பிற்குரிய ஒரு டியூஷன் ஆசிரியர் ஆவார். அவ்வாறு ஆவதற்கான காரணம், அவர் மாணவர்கள் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு தான். அதனால் தான் இன்று அவரை 'டீச்சர் அம்மா' என்ற brand name அவரது வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் பாவிக்கப்படுகிறது.இம்முறை இந்த கௌரவிப்பு விழா இரண்டு பகுதிகளாக நடந்த அதே வேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 6,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.சமுகமளித்திருந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கலாநிதி ஹயேஷிகா பெர்னாண்டோ ஆசிரியருடன் உரையாடியமை மட்டுமல்லாமல், புகைப்படங்களும் பெற்றுக் கொண்டனர். மேலும், சிறு சிறுவரகள் அவரைக் கட்டியணைத்து கொண்டமை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியாயிற்று.அதே போல, அன்பான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு நன்றிக்கடனாக, ஏற்கனவே செய்யப்பட்டது போலவே இம்முறையும் வானிலிருந்து பொழிய வைக்கப்பட்ட "அன்பின் பூ மழை" அனைவரது அன்பையும், பாராட்டையும் பெற்றுக் கொண்டது.

விபரங்களுக்கு
பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

பெரிய வெங்காயக் கொள்முதல் திட்டம் ஆரம்பம்: கிலோவுக்கு 130 ரூபா நிர்ணயம்

தற்போது பாரிய வெங்காயக் கொள்முதல் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 130 ரூபா என்ற விலை அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் சதொச, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, தம்புள்ளை, கலாவெவ, பக்கமூன, நாவுல, சிகிரியா மற்றும் கல்கிரியாகம உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய வெங்காய அறுவடைகள் இடம்பெற்று வருகின்றன.இதற்கிடையே, நேற்று பக்கமூன நகரில் பெரிய வெங்காய விவசாயிகள் குழுவொன்று தமது உற்பத்திக்கு நியாயமான விலையைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சந்தையில் தற்போது வழங்கப்படும் விலைகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்யவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விபரங்களுக்கு
Entertainment Stories
Explore More

"எனது சிக்ஸ் பேக்.." - பேபி பம்ப் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சமந்தா வேடிக்கையான பதிவு!

தென்னிந்தியத் திரைப்பட நடிகை சமந்தா, தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில், கர்ப்பிணியாக இருப்பதை உணர்த்தும் வகையில் தனது வயிற்றின் படத்தை வெளியிட்டிருந்தார். அதனுடன், "Baby Bump" என்ற தலைப்பையும் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவைத் தொடர்ந்து, "எனது சிக்ஸ் பேக், விரைவில் உங்களைப் பார்க்கிறேன்" என்ற நகைச்சுவையான வாசகத்தையும் அவர் பதிவிட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப் பதிவைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும், நடிகை சமந்தா இதுகுறித்து அதிகாரபூர்வமாக மேலதிக விளக்கம் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

விபரங்களுக்கு
அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? : வதந்திகளுக்கு தலைமை நற்பணி இயக்கம் விளக்கம்!

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? : வதந்திகளுக்கு தலைமை நற்பணி இயக்கம் விளக்கம்!

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு, அவரது தலைமை நற்பணி இயக்கம் இன்று (29) அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.நடிகர் சூர்யா தற்போது அரசியலுக்கு வருவதற்கான எந்தவித திட்டமோ அல்லது எண்ணமோ இல்லை என தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.மேலும், சூர்யாவின் நற்பணி இயக்கம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மற்றும் சமூக நலப் பணிகள் தொடர்ந்தும் வழக்கம்போல முன்னெடுக்கப்படும் என்றும், சமூக சேவைகளே சூர்யாவுக்கு மனநிறைவை வழங்குகின்றன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சூர்யா நற்பணி இயக்கக் கூட்டத்தில் ரா. வீரமணி வெளியிட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே தவிர, இயக்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிப்பவை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.எனவே, நடிகர் சூர்யா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவரது தலைமை நற்பணி இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

விபரங்களுக்கு
நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணம் மற்றும் வைரம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து ரூ. 3 இலட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம் (டைமண்ட்) செயின் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, நடிகரின் மேனேஜர் நீலாங்கரை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வீட்டில் பணிபுரியும் 2 சாரதிகள், ஒரு பி.ஏ (P.A), ஒரு பணிப்பெண் மற்றும் அவரது மகன் மீது சந்தேகம் இருப்பதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை நீலாங்கரை காவல்துறை முன்னெடுத்து வருகிறது.

விபரங்களுக்கு
சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சுப்பர் ஸ்டார் - உலக நாயகன் கூட்டணி: ரஜினியின் அடுத்த அதிரடி 'தர்மன்' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ‘தர்மன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதுடன் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் படையப்பா, வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் கலவையாக பொழுதுபோக்கு நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் என தெரிவித்துள்ளார்.

விபரங்களுக்கு
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!

வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது புகைப்படங்கள் (Photos) மற்றும் காணொளிகளை ஒருமுறை மட்டுமே பார்க்கும் வகையில் அனுப்பப்படும் 'View-once' வசதியைப் போலவே, இனி சாதாரண குறுந்தகவல்களையும் (Text Messages) ஒருமுறை மட்டுமே படிக்கும் வகையில் அனுப்பும் புதிய முறையை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்களின் தனியுரிமையைப் பேணவும், முக்கியமான தகவல்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காகவுமே இந்த 'View-once text' முறை கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாதுகாப்பு வசதியானது, தற்போது முதற்கட்டமாக ஒரு சில ஐபோன் (iPhone) பயனர்களுக்கு மட்டும் சோதனை முறையில் (Beta Version) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததும், அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த புதிய அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விபரங்களுக்கு
'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட மரணம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியாவின் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் 'புஷ்பா 2' திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்குத் தொடர்பாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உட்பட 23 பேரையும் எதிர்வரும் ஜூன் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2024 டிசம்பர் 4 அன்று ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காகக் கூடிய ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்ததுடன், அவரது 8 வயது மகனும் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை கடந்த டிசம்பர் 24 அன்று 23 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குறித்த சம்பவம் தொடர்பாக 2024 டிசம்பர் 13 அன்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன், படக்குழுவினர் மற்றும் தெலங்கானா அரசாங்கம் நிதியுதவி வழங்கியிருந்தது. இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் அல்லு அர்ஜுனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

விபரங்களுக்கு
இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

இந்தியத் திரையுலகை நோக்கிய நோலனின் அடுத்த அதிரடிப் பயணம்!

புகழ்பெற்ற ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'The Odyssey' திரைப்படம், இந்தியாவில் சிறப்பு காட்சி (Premiere) காணும் முதல் நோலன் திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளது. உலகளாவிய விளம்பரப் பயணத்தின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை மாதம் இயக்குனர் நோலன், அவரது தயாரிப்பாளரான மனைவி எம்மா தோமஸ் மற்றும் ஹொலிவுட் நட்சத்திரங்களான மேட் டாமன், டாம் ஹாலாண்ட் ஆகியோர் மும்பை நகருக்கு வருகை தரவுள்ளனர். யுனிவர்சல் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் லண்டன், பாரிஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய சர்வதேச நகரங்களுடன் இணைந்து மும்பையையும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ உலகளாவிய சிறப்பு நகரமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹோமரின் உன்னத காவியமான, டிராய் நகரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒடிஸியஸ் தனது வீட்டிற்குத் திரும்ப மேற்கொள்ளும் பத்து ஆண்டுகாலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒடிஸியஸாக மேட் டாமனும், அவரது மகன் டெலிமகாஸாக டாம் ஹோலாண்டும் நடித்துள்ளனர். முற்றிலும் புதிய ஐமாக்ஸ் (IMAX) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகளவில் முழுமையாக ஐமாக்ஸ் கேமராக்களால் படமாக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையை 'The Odyssey' பெற்றுள்ளது. இந்தியாவில் இதன் சிறப்பு காட்சி மும்பையிலுள்ள 'PVR Icon IMAX: Phoenix Palladium' திரையரங்கில் நடைபெறவுள்ளது. சின்கோபி (Syncopy) நிறுவனத்திற்காக நோலன் மற்றும் எம்மா தயாரித்துள்ள இந்த படத்தில், மேட் டாமன் மற்றும் டாம் ஹாலாண்டுடன் இணைந்து ஆன் ஹாத்வே, ரொபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டாயா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பல முன்னணி ஹொலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

விபரங்களுக்கு
Hiru TV News | Programmes
/////////////////////////////////////////////// Commented on 2025-09-17 ////////////////////////////////////////////////////