General04 July 2026

அபாயத்தைக் குறைக்க வான்படையின் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், இலங்கை வான்படை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வான்படை முகாம்களையும் உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இலங்கை வான்படைத் தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், வான்படை உறுப்பினர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதுடன், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் பணிகளையும் முன்னெடுக்கவுள்ளனர்.

மேலும், டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளன.

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதையும், டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த வேலைத்திட்டம், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes