General07 July 2026

"அரசின் பொறுப்பில் உள்ள கைதிகளின் உயிருக்கு பாதுகாப்பு எங்கே?" – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் மீது சாடல்

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

நாடாளுடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் மற்றும் தடுப்புக்காவலில் இருப்பவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்று தற்போதைய ஜனாதிபதி, எதிர்க்கட்சியில் இருந்த சமயம் பிரஸ்தாபித்தார்.

இருப்பினும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்ததை இந்த அரசாங்கம் தடுக்கத் தவறிவிட்டது. இதன் விளைவாக, 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் நூறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதித்துறையில் பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில், நீதி அமைச்சர் இந்தப் பிரச்சினைகளைக் கவனிக்காமல், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தலையீடுகளைச் செய்து வருவதனைக் காண முடியுமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes