அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள உத்தரவாத விலைகளின் கீழ் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாய்க்கும், சம்பா நெல்லை 130 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல்லை 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து இந்த உத்தரவாத விலைகளில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் தயாராக இருப்பதாகவும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தால் சந்தையில் அரிசி விலையைக் குறைக்க அவர்கள் உடன்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Latest News
நாட்டின் பல பகுதிகளில் மழை: ஏனைய பகுதிகளில் வரட்சியான வானிலை
Local
08 July 2026
சுகீஷ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலை
Local
08 July 2026
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
Local
08 July 2026
அரிசி விலை குறையுமா? : உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆலை உரிமையாளர்கள் இணக்கம்!
Local
08 July 2026
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக அதிகரிப்பு: 42 பேர் உயிரிழப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன
Local
08 July 2026
அர்ஜென்டினாவிடம் எகிப்து தோல்வி: நடுவர்கள் மீது பயிற்சியாளர் குற்றச்சாட்டு
Local
08 July 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் வீழ்ச்சி
Local
08 July 2026
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
08 July 2026
நீர்கொழும்பு சிறை மோதல் : பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!
Local
08 July 2026