யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (9) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாணவர் சமூகம் பங்கேற்கவில்லை என , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினால் விசேட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில், இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும், கல்விமான்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள் குறித்து தமது கன்டணங்களை மாணவர் ஒன்றியம் பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மற்றும் திட்டமிட்ட நலன்கருதும் முன்னெடுப்புகளை கண்டித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, திட்டமிட்ட அவதூறுகள் தொடர்பிலும் மாணவர் ஒன்றியம் தொடர் அவதானிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புணர்வுக்கும் எதிரான செயல்களால், தேசியத்தினை பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டரீதியாக குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து, சமூக ஊடகப் பரப்புரையாக அவமதிப்பு உருவாக்கும் முயற்சிகளை கட்டவிழ்த்து, சமூக ஊடக பதிவுகளில் நீதியற்ற ஊடக தரக்குறைவான நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறன செயற்பாடுகள் தமிழ்ச் சமூகத்தின் பொறுப்புணர்வுக்கும், நிதானமான ஊடகப் பொறுப்புணர்வுக்கும் கேள்விக்குறியாக இருப்பதுடன், சமூக ஊடகங்களில் நிதானம் தவறிக் கருத்து வெளியிடுபவர்களின் பின்னால் செல்லும் பரிதாபநிலையை சமூகம் மிக ஆழமாக அறிந்து கொள்வதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
வெறுப்பை மட்டுமே உணவாகக் கொண்டு குந்தகம் முற்றும் இந்தத் தாக்குதல்களை பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றைச் செய்வோரை சமூகத்தின் முன் கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியான ஆதரவைத் தெரிவிப்பதாகவும், ஒன்றியும் கூறியுள்ளது.
அதேவேளை, சமூக ஊடகவியலாளர் அமைப்புகள், செய்தியாளர்களுக்கு எதிராக, சட்டத்திற்கும் நீதியுமானதுமான முன்னெடுப்புகளால் தம்மீதான அவதூறுகளை களைய முற்படும் ஆளுமைகளுக்கு மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்போதும் இருப்பதையும் வலியுறுத்த விரும்புவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாணவர் ஒன்றியத்தினால் விசேட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில், இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும், கல்விமான்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சதித்திட்டங்கள் குறித்து தமது கன்டணங்களை மாணவர் ஒன்றியம் பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை கலைப்பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான பொய்ப்பிரசாரங்கள் மற்றும் திட்டமிட்ட நலன்கருதும் முன்னெடுப்புகளை கண்டித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, திட்டமிட்ட அவதூறுகள் தொடர்பிலும் மாணவர் ஒன்றியம் தொடர் அவதானிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புணர்வுக்கும் எதிரான செயல்களால், தேசியத்தினை பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் அனைவரும் குறிவைத்துத் தாக்கப்படும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதை யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் சமூகம் ஆழமாக அவதானித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டரீதியாக குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து, சமூக ஊடகப் பரப்புரையாக அவமதிப்பு உருவாக்கும் முயற்சிகளை கட்டவிழ்த்து, சமூக ஊடக பதிவுகளில் நீதியற்ற ஊடக தரக்குறைவான நிலையும் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறன செயற்பாடுகள் தமிழ்ச் சமூகத்தின் பொறுப்புணர்வுக்கும், நிதானமான ஊடகப் பொறுப்புணர்வுக்கும் கேள்விக்குறியாக இருப்பதுடன், சமூக ஊடகங்களில் நிதானம் தவறிக் கருத்து வெளியிடுபவர்களின் பின்னால் செல்லும் பரிதாபநிலையை சமூகம் மிக ஆழமாக அறிந்து கொள்வதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
வெறுப்பை மட்டுமே உணவாகக் கொண்டு குந்தகம் முற்றும் இந்தத் தாக்குதல்களை பல்கலைக்கழக மாணவர் சமூகம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றைச் செய்வோரை சமூகத்தின் முன் கொண்டு செல்வதற்கான முயற்சிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியான ஆதரவைத் தெரிவிப்பதாகவும், ஒன்றியும் கூறியுள்ளது.
அதேவேளை, சமூக ஊடகவியலாளர் அமைப்புகள், செய்தியாளர்களுக்கு எதிராக, சட்டத்திற்கும் நீதியுமானதுமான முன்னெடுப்புகளால் தம்மீதான அவதூறுகளை களைய முற்படும் ஆளுமைகளுக்கு மாணவர் சமூகத்தின் ஆதரவு எப்போதும் இருப்பதையும் வலியுறுத்த விரும்புவதாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
புலமைசார் சொத்துரிமை வழக்கு - விமல் வீரவங்சவுக்கு எதிராக 1 மில்லியன் ரூபாய் நட்ட ஈட்டுத் தீர்ப்பு உறுதி
Local
09 July 2026
யாழ்.பல்கலையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் - அவதூறு பரப்பும் செயல் : மாணவர் ஒன்றியம் கன்டணம்!
Local
09 July 2026
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்
Local
09 July 2026
சிறுவர் பாதுகாப்புக்குத் தேசிய நெருக்கடி?" – நாடாளுமன்றத்தில் கேள்விகளை அடுக்கிய சஜித்
Local
09 July 2026
பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம் : நான்கு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பு
Local
09 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அசாதாரண நிலை - குற்றப்பிரதேசமாக பிரகடனம்
Local
09 July 2026
இலகு தொடருந்து திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு
Local
09 July 2026
பிரபல பாடகி பொனி டைலர் காலமானார்
Local
09 July 2026
வெல்லம்பிட்டி பகுதியில் 32 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
Local
09 July 2026
சிறுவர்களைக் குறிவைக்கும் நுணுக்கமான குற்றங்கள்: பெற்றோர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
Local
09 July 2026