General12 July 2026

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் கவனத்திற்கு!

கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக மொத்தம் 92,043 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை பரிசீலித்ததன் பின்னர், 42,937 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

அத்துடன் புதிய பட்டப்படிப்பு பாடநெறிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes