கட்டார் நாட்டின் நவீன அரசை உருவாக்கியவரும், முன்னாள் அமீருமான ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவையொட்டி, இன்று (13) இந்திய அரசு, தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று (12) வெளியிட்ட அறிவிப்பில், துக்க தினமான இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரச அலுவலகங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரை "கட்டார் நாட்டை உயர்ந்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அழைத்துச் சென்ற தொலைநோக்கு பார்வையாளர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், "கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் கட்டாருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியாவின் உண்மையான நண்பராக எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த துக்க தின நிகழ்வுகள் மூலம், கட்டாருடனான இந்தியாவின் நெருக்கமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Latest News
இணைய விமர்சகர்களைச் சாடிய குஷ்பு - ஆதரவாக குரல் கொடுத்த ராதிகா
Local
13 July 2026
இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம்
Local
13 July 2026
வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து சுகயீன விடுமுறைப் போராட்டம்
Local
13 July 2026
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு - புதிய கண்டுபிடிப்பு!
Local
13 July 2026
தங்க விலையில் மீண்டும் சரிவு – இன்றைய புதிய விலை விபரம்!
Local
13 July 2026
தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசாதீர்கள்- ஹன்சிகா உருக்கம்
Local
13 July 2026
பேராபத்து காத்திருக்கிறதா? கடலுக்கு அடியில் 73 புதிய எரிமலைகள் கண்டுபிடிப்பு - ஆராச்சியாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!
Local
13 July 2026
கட்டார் முன்னாள் அமீர் மறைவு: இந்தியாவில் இன்று துக்க தினம் பிரகடனம்
Local
13 July 2026
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம் - கொழும்பில் இன்று முக்கிய சந்திப்பு!
Local
13 July 2026
நிலக்கரி கொள்முதல் விவகாரம் - லக்விஜய மின்நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் விசாரணைக்கு அழைப்பு
Local
13 July 2026