General14 July 2026

சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய திட்டம்!

சிறு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு வயது வாரியான கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

13 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் கண்காணிப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் வயது அதிகரிக்க அதிகரிக்க, இந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்.

இணையத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைத் தவிர்க்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த விரிவான மற்றும் உறுதியான திட்ட வரைபடத்தை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 'ஸ்டேட் ஒஃப் தி யூனியன்' உரையின் போது வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே சமூக வலைதளங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள அல்லது பரிசீலித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை உலகளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes