General14 July 2026

நோர்வே கால்பந்து அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: ஒன்று திரண்ட 1 லட்சம் ரசிகர்கள்!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதியுடன் வெளியேறிய போதிலும், நோர்வே நாட்டின் கால்பந்து அணியினருக்கு அந்தநாட்டு மக்கள் 1 லட்சம் பேருக்கும் மேலாகத் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

இங்கிலாந்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து நாடு திரும்பிய நோர்வே கால்பந்து அணியினருக்கு, நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் உள்ள அரச மாளிகையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

நோர்வேயின் மன்னர் ஹரால்டைச் சந்தித்த அணியினர், பின்னர் அரச மாளிகையின் முன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தினர்.

அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலாண்ட் மற்றும் சாண்டர் பெர்கே ஆகியோர், வானூர்திப் பயணத்தில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, ரசிகர்களுடனான இறுதிச் சந்திப்பில் பங்கேற்க முடியாமல் முன்னதாகவே கிளம்பிச் சென்றதாகப் பயிற்சியாளர் ஸ்டேல் சோல்பாக்கன் விளக்கமளித்துள்ளார்.

தோல்வியிலும் அணியின் வீரர்களைக் கொண்டாடும் நோர்வே மக்களின் இந்த ஒற்றுமை, கால்பந்து உலகில் நெகிழ்ச்சியான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes