General15 July 2026

பலத்த காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது நாளை (16) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றின் தீவிரத்தன்மை காரணமாக, குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இந்த காலப்பகுதியில் 12 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு 'அம்பர்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes