International18 July 2026

இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் - சீமான் சூசக அறிவிப்பு

தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சூசகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், சுமார் 20 லட்சம் மக்கள் தமக்கு வாக்களித்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு ஆதரவாளர் தம்மிடம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் என்று கூறியபோது, “உறுதியாக செல்வேன்” என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், எந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை
Related recommendation
Hiru TV News | Programmes