தமிழ் இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் ஆதரவு இருப்பதாக டெலோ (TELO) அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
'சூரியனின் விழுதுகள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவதற்கான ஒரு சாதகமான சூழல் உருவாகி வருகிறது.
இந்த விசாரணைகள் மற்றும் அதன் ஊடாக வெளிவரும் உண்மைகள், ஜனாதிபதி மீதான நம்பிக்கையைத் தமிழ் மக்களிடையே அதிகரித்துள்ளன.
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பே ஜனாதிபதிக்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவதற்கான முக்கிய காரணமாகும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
90.8 மில்லியன் ரூபாய் போதைப்பொருளுடன் மலேசிய நாட்டவர் கைது
Local
18 July 2026
மரணத்துக்கு முன்னதாக வீட்டுக்கு வந்தவர்கள் தொடர்பில் தீவிர விசாரணை: துப்பாக்கி பகுப்பாய்வுக்கு!
Local
18 July 2026
இலங்கையில் 2,000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை
Local
18 July 2026
இந்திய தனியார் நிறுவனத்தின் ‘விக்ரம்-1’ ரொக்கட் விண்ணில் பாய்ந்தது!
Local
18 July 2026
அமெரிக்க அரச அதிகாரிகளுக்கான டிக்டொக் பயன்பாட்டுத் தடை நீக்கம்
Local
18 July 2026
ஜனாதிபதி மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்: செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
Local
18 July 2026
விஜய் பிறந்தநாள் கேக் : கொட்டிய அதிர்ஷ்டம் - வியாபாரத்தில் அதிசயம்!
Local
18 July 2026
பிரதியமைச்சர் டி.பி. சரத் கூறியது பொய்: உண்மை சரிபார்ப்பு அறிக்கை வெளியீடு!
Local
18 July 2026
ஜப்பான் பகிரங்க பூப்பந்தாட்டத் தொடர்: சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை
Local
18 July 2026
பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு - குடும்பத்தினரும் உடந்தையா ?
Local
18 July 2026