International20 July 2026

அமெரிக்க ஊடுருவல்களை நொடியில் முறியடிப்போம்: ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை!

ஈரானிய மண்ணில் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு ஊடுருவல் முயற்சியையும் நொடிப் பொழுதில் முறியடிக்கத் தயார் நிலையில் இருப்பதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களது தரைப்படை நவீன உபகரணங்கள், தொடர்ச்சியான பயிற்சிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன்களைக் கொண்டு இயங்கி வருவதாகத் தெரிவித்துள்ள காவல்படை, அமெரிக்காவின் ஊடுருவல்களுக்கு எதிராக உயர்மட்டத் தயார் நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான விழிப்புணர்வும் தயார் நிலையுமே நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், இந்தத் தயார் நிலை அனைத்துக் களங்களிலும் தீவிரமாகப் பின்பற்றப்படுவதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.

ஈரானியப் படைகள் எதிரிகளின் எந்தவொரு ஆக்கிரமிப்பையும் உடனடியாக முறியடிக்கத் தயார் நிலையில் உள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தரைப்படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் ரூஹுல்லா நூரி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes