International25 July 2026

சிட்னியில் அதிவேகமாகச் சென்ற உலகக் கிண்ணக் கால்பந்து வீரர் தடுத்து நிறுத்தம்: போதைப்பொருள் சோதனையில் சிக்கிய கிறிஸ்டியன் வோல்பாட்டோ!

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடிய கிறிஸ்டியன் வோல்பாட்டோ கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் சோதனையின்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் அதிவேகமாக வாகனம் செலுத்தியதாகவும்; அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இத்தாலிய அணியில் இருந்து உலகக்கிண்ணத்துக்கு முன்பதாக அவுஸ்திரேலியாவுக்கு மாறிய 22 வயதான வோல்பாட்டோ, நேற்று அதிகாலையில் சிட்னியின் அன்சாக் பாலத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

உலகக்கிண்ணத் தொடரில், வோல்பாட்டோ அவுஸ்திரேலிய அணிக்காக மூன்று போட்டிகளில் பங்கேற்றார்.
Related recommendation
Hiru TV News | Programmes