இரண்டாம் உலகப் போரின்போது, அடோல்ப் ஹிட்லரின் நாசிசப் படைகளை எதிர்த்துப் போராடி பிரான்சை மீட்பதற்காக 1944 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய நோர்மாண்டி (Normandy) D-Day கடற்கரைகள், யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கடற்கரைகள் 1944ஆம் ஆண்டு நிகழ்வுகளாலும் அவற்றின் அழியாத நினைவுகளாலும் உருவான "விதிவிலக்கான கலாசார நிலப்பரப்பாகும்" எனவும், அதனாலேயே இது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, 1944 ஜூன் 6 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சை மீட்க நேச நாட்டுப் படைகள் நோர்மாண்டி கடற்கரை வழியாக மேற்கொண்ட மாபெரும் கடல்வழித் தாக்குதலின் தொடக்க நாளே 'D-Day' என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும், நினைவுகூரல் நிகழ்வுகள் இந்த கடற்கரைய வழக்கமாக இடம்பெறுகின்றன.
இந்தத் தரையிறக்க நடவடிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பெல்ஜியம், நோர்வே, போலந்து, லக்ஸம்பேர்க், கிரேக்கம், செக்கோஸ்லோவாக்கியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.
இவர்களில் 177 பிரான்ஸ் நாட்டு கொமாண்டோ வீரர்களும் அடங்குவர்.
நாசி ஜேர்மனியிடமிருந்து ஐரோப்பாவை விடுவிப்பதில் இந்தத் தாக்குதல் ஒரு தீர்க்கமான கட்டமாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக 156,115 நேச நாட்டுத் துருப்புகள் கடல் வழியாக (யூட்டா, ஒமாஹா, கோல்ட், ஜூனோ மற்றும் ஸ்வேர்ட் எனப் பெயரிடப்பட்ட கடற்கரைகளில்) தரையிறங்கி, தாக்குதலில் ஈடுபட்டன.
இதுகுறித்து யுனெஸ்கோ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கடற்கரைகள் 1944ஆம் ஆண்டு நிகழ்வுகளாலும் அவற்றின் அழியாத நினைவுகளாலும் உருவான "விதிவிலக்கான கலாசார நிலப்பரப்பாகும்" எனவும், அதனாலேயே இது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, 1944 ஜூன் 6 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சை மீட்க நேச நாட்டுப் படைகள் நோர்மாண்டி கடற்கரை வழியாக மேற்கொண்ட மாபெரும் கடல்வழித் தாக்குதலின் தொடக்க நாளே 'D-Day' என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும், நினைவுகூரல் நிகழ்வுகள் இந்த கடற்கரைய வழக்கமாக இடம்பெறுகின்றன.
இந்தத் தரையிறக்க நடவடிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பெல்ஜியம், நோர்வே, போலந்து, லக்ஸம்பேர்க், கிரேக்கம், செக்கோஸ்லோவாக்கியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.
இவர்களில் 177 பிரான்ஸ் நாட்டு கொமாண்டோ வீரர்களும் அடங்குவர்.
நாசி ஜேர்மனியிடமிருந்து ஐரோப்பாவை விடுவிப்பதில் இந்தத் தாக்குதல் ஒரு தீர்க்கமான கட்டமாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக 156,115 நேச நாட்டுத் துருப்புகள் கடல் வழியாக (யூட்டா, ஒமாஹா, கோல்ட், ஜூனோ மற்றும் ஸ்வேர்ட் எனப் பெயரிடப்பட்ட கடற்கரைகளில்) தரையிறங்கி, தாக்குதலில் ஈடுபட்டன.
Latest News
உகண்டாவில் எபோலா தொற்றுக்கு முற்றுப்புள்ளி?
Local
28 July 2026
ஜப்பானில் நில அதிர்வு - 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு!
Local
28 July 2026
களனிவெளி தொடருந்து சேவையில் பாதிப்பு
Local
28 July 2026
இலங்கைக் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்: புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Local
28 July 2026
பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா மலேசியாவில் கைது!
Local
28 July 2026
பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்!
Local
28 July 2026
மார்வெலில் மீண்டும் களமிறங்கும் ரொபர்ட் டவுனி ஜூனியர் - வேதனமே புதிய சாதனை!
Local
28 July 2026
ஜப்பானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Local
28 July 2026
பன்முகப் போக்குவரத்து மையங்களை நிர்வகிக்க புதிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
Local
28 July 2026
இலங்கைக்குப் பெருமை சேர்த்த செனீசா:சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி
Local
28 July 2026