புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வருவதற்கான பணிகள் இடம்பெற்றுவருவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எமது செய்திப் பிரிவுடனான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்
நாட்டில் வாய் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, வெற்றிலை பாக்குடன் புகையிலை கலந்து விற்பனை செய்தல் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களைத் தடை செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிலையுடன் புகையிலையைச் சேர்த்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சாதாரணமாக வெற்றிலை, பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதுடன், புகையிலை கலந்த வெற்றிலை மற்றும் பாபுல், மாவா போன்ற புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை விற்பனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மதுவரி திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகிய நான்கு பிரிவினருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறுபவர்களுக்கு 2000 ரூபாய்க்கு குறையாத அபராதமும், ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுவதால் ஆண்டிற்கு புதிதாக 3,808 வாய் புற்று நோயாளர்கள் கண்டறியப்படுவதுடன், நாளொன்றில் சராசரியாக மூவர் உயிரிழக்கின்றனர். வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் இவற்றில் சுமார் 80 வீதமான உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றும், சாதாரண மக்களை இந்த ஆபத்திலிருந்து மீட்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைத்து பிரஜைகளுக்கும் ஆயுட்காலம் முழுவதும் சிகரெட் விற்பனை செய்வதையோ அல்லது கொள்முதல் செய்வதையோ தடை செய்யும் நோக்கத்தில் சட்டமொன்றை தயாரிக்க tobacco free என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எமது செய்திப் பிரிவுடனான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்
நாட்டில் வாய் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டு, வெற்றிலை பாக்குடன் புகையிலை கலந்து விற்பனை செய்தல் மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களைத் தடை செய்வதற்கான சட்டங்களை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிலையுடன் புகையிலையைச் சேர்த்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சாதாரணமாக வெற்றிலை, பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என்பதுடன், புகையிலை கலந்த வெற்றிலை மற்றும் பாபுல், மாவா போன்ற புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகையிலை விற்பனை தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், மதுவரி திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகிய நான்கு பிரிவினருக்கு சட்டப்பூர்வ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறுபவர்களுக்கு 2000 ரூபாய்க்கு குறையாத அபராதமும், ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுவதால் ஆண்டிற்கு புதிதாக 3,808 வாய் புற்று நோயாளர்கள் கண்டறியப்படுவதுடன், நாளொன்றில் சராசரியாக மூவர் உயிரிழக்கின்றனர். வெற்றிலையுடன் புகையிலை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் இவற்றில் சுமார் 80 வீதமான உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்றும், சாதாரண மக்களை இந்த ஆபத்திலிருந்து மீட்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைத்து பிரஜைகளுக்கும் ஆயுட்காலம் முழுவதும் சிகரெட் விற்பனை செய்வதையோ அல்லது கொள்முதல் செய்வதையோ தடை செய்யும் நோக்கத்தில் சட்டமொன்றை தயாரிக்க tobacco free என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரமொன்றும் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Latest News
பூரணை தினத்தில் அதிபர்களுக்கான கூட்டத்திற்கு அழைப்பு: இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்!
Local
27 July 2026
கெமரூன் நாட்டு சிறைக்கைதிகளின் இசை பயணம்: வெளியாகியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள்
Local
27 July 2026
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் இனி குற்றம்: புதிய சட்டத்தின் விதிகள் என்ன?
Local
27 July 2026
ஈரானுடன் போரை ஆரம்பித்தமை குறித்து கவலை வெளியிட்டுள்ள பிரித்தானிய புதிய பிரதமர்
Local
27 July 2026
ராமாயணா' திரைப்படத்தின் முன்னோட்டம் திரையிடல்: வைரலாகும் ரசிகையின் சிறப்புப் பரிசு காணொளி!
Local
27 July 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை: சுற்றுலா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்!
Local
27 July 2026
பெர்லின் தாக்குதல் சந்தேகநபர் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!
Local
26 July 2026
சிகரெட் - புகையிலை விற்பனைக்கு நிரந்தர தடை; சட்டமொன்றை கொண்டுவர ஏற்பாடு!
Local
26 July 2026
தீவிரமடையும் எல் நினோ: இலங்கைக்கு கடுமையான வறட்சி அச்சறுத்தல்!
Local
26 July 2026
2026 ஜூன் மாதத்தில் சொகுசு வாகனப் பதிவுகள் அதிகரிப்பு
Local
26 July 2026