International27 July 2026

2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு

2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணத்தின் தேவையே பெருமளவில் குறைந்துவிடும் என தொழில்நுட்பத் தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித வடிவ ரோபோக்களின் அதிவேக வளர்ச்சி, மனிதர்களைக் காட்டிலும் அதிக அளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்யும் திறனை உருவாக்கும் என அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, உலகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தட்டுப்பாடு இல்லாத நிலை உருவாகக்கூடும் என்றும், அதன் விளைவாக பணத்தின் அவசியமும் அதன் பொருளாதார முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் ஈலோன் மஸ்க் கணித்துள்ளார்.

எனினும், இது தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது எதிர்காலக் கணிப்பாகும்.

2036-ஆம் ஆண்டுக்குள் பணத்தின் தேவை முற்றிலும் இல்லாமல் போகும் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ பொருளாதார மதிப்பீடோ அல்லது உலகளாவிய ஒருமித்த கருத்தோ இதுவரை வெளியாகவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes